அரசு பஸ் டிரைவர்களுக்கும் கட்டாய ‘சீட் பெல்ட்’ வழக்கு: பதிலளிக்க அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு

சமீபத்தில் கார் டிரைவர்கள் சீட் பெல்ட் அணிந்து தான் காரை ஓட்ட வேண்டும் என கட்டாயமாக்கியது தமிழக அரசு. அதனை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப் பட்டு வருகிறது.
இந்நிலையில், மோட்டார் வாகனச் சட்டப்படி கார் டிரைவர்கள் மட்டுமல்ல, பஸ் டிரைவர்களும் சீட் பெல்ட் அணிய வேண்டும். எனவே, அதற்கான வசதியை அவர்களுக்கு ஏற்படுத்தித் தாருங்கள் என பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார் வழக்கறிஞார் பிரகாஷ் ராஜ் என்பவர்.
இது தொடர்பாக, சென்னை ஹைகோர்ட்டில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
மோட்டார் வாகனச் சட்டப்படி....
மோட்டார் வாகன சட்டத்தின்படி கார் மற்றும் பஸ்களை ஓட்டும் டிரைவர்கள் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும். அவ்வாறு அணியாத கார் டிரைவர்களுக்கு சென்னை மாநகர போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள்.
விபத்தில் சிக்கும் டிரைவர்கள்...
அதே நேரம் அரசு பேருந்து டிரைவர்களுக்கு ‘சீட் பெல்ட்' வசதி இல்லாமல் உள்ளது. இந்த பேருந்துகள் விபத்தில் சிக்கும்போது டிரைவர்கள் உயிரிழக்கின்றனர்.
தீயணைப்புக் கருவியும்....
எனவே மோட்டார் வாகன சட்டத்தின்படி தமிழகத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகளிலும் சீட் பெல்ட் மற்றும் தீயணைப்பு கருவி பொருத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என இவ்வாறு அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
நோட்டீஸ்...
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி ரவிச்சந்திரபாபு ஆகியோர், இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications