செல்வகணபதி 'காலி' செய்த எம்பி பதவி: தமிழகத்தில் ஜூலை 3ம் தேதி ராஜ்யசபா இடைத்தேர்தல்

Subscribe to Oneindia Tamil

By Elections for one Rajya Sabha Seats to be Held in July 3
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு ஜூலை 3ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் செல்வகணபதி. தற்போது தி.மு.கவில் உள்ளார். இவர் 2010ம் ஆண்டு திமுக சார்பில், ராஜ்யசபா எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், இவர் அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது, சுடுகாட்டுக்கு கூரை அமைப்பதில் ஊழல் செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அதைத் தொடர்ந்து, அவர் தன் எம்.பி பதவியை கடந்த ஏப்ரல் 18ம் தேதி ராஜினாமா செய்தார். அந்தப் பதவிக்கு இப்போது இடைத் தேர்தல் நடக்கிறது.

ராஜ்யசபா இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 16-ல் தொடங்குகிறது. மனு தாக்கலுக்கு ஜூன் 23 கடைசி நாள். ஜூன் 24-ல் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். மனுக்களை திரும்பப்பெற ஜூன் 26-ம் தேதி கடைசிநாளாகும்.

திமுக ராஜ்யசபா உறுப்பினர் செல்வகணபதி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதால் செல்வகணபதி தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+