குற்ற வழக்குகளை அபிடவிட்டில் தெரிவிக்கணும்: தேர்தல் ஆணையம் உத்தரவால் கலக்கம்
நெல்லை: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீதுள்ள குற்ற வழக்குகளை அபிடவிட்டில் தெரிவிக்க தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால் வேட்பாளர்கள் கதி கலங்கி போய் உள்ளனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 24ம் தேதி ஓரே கட்டமாக லோக்சபா பொதுத் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 24ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி வரை நடக்கிறது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவுடன் அபிடவிட்டையும் தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதில் வேட்பாளர் மீதான கிரிமினல் வழக்குகளை குறிப்பிட வேண்டும். அதாவது தண்டனை பெற்ற வழக்குகள், நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் குறித்து தெரிவிக்க வேண்டும்.
வேட்பாளர், அவரது மனைவி, குழந்தைகளின் வருமான வரி கணக்கு எண், வருமான வரி தாக்கல் செய்த நாள், அசையும், அசையா சொத்துகள், அவரது மனைவி, குழந்தைகள் பெயரில் அரசு, அரசு சாரா நிறுவனங்களில் வாங்கியகடன் விபரம், வேட்பாளர் மற்றும் மனைவியின் தொழில், அவர்களின் கல்வி தகுதி முதலியவற்றை அபிடவிட்டில் தெரிவிக்க வேண்டும்.
அபிடவிட்டில் எந்த கேள்விக்கும் பதில் அளிக்காமல் பூர்த்தி செய்யாமல் விடக் கூடாது. தேர்தல் நடத்தும் அலுவலர் அதை சரி பார்ப்பார். அப்போது பூர்த்தி செய்யாத இடங்களை பூர்த்தி செய்ய வலியுறுத்துவார். எல்லா கேள்விகளுக்கும் பதில் இல்லை, தெரியாது, பொருந்தாது என்றாவது தெரிவிக்க வேண்டும்.
தேர்தல் நடத்தும் அலுவலரின் அறிவுரைக்கு பின்னரும் அபிடவிட்டில் பூர்த்தி செய்யாத இடங்கள் இருந்தால் அந்த வேட்பாளரின் விண்ணப்பம் உடனடியாக தள்ளுபடி செய்யப்படும்.
அபிடவிட்டை வேட்பு மனுவுடன் சேர்ந்து தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு முடியாவிட்டால் வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாள் மாலை 3 மணிக்குள்ளாவது தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இதனால் குற்ற பின்னனியில் உள்ள வேட்பாள்கள் கதி கலங்கி போய் உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications