குற்ற வழக்குகளை அபிடவிட்டில் தெரிவிக்கணும்: தேர்தல் ஆணையம் உத்தரவால் கலக்கம்
நெல்லை: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீதுள்ள குற்ற வழக்குகளை அபிடவிட்டில் தெரிவிக்க தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால் வேட்பாளர்கள் கதி கலங்கி போய் உள்ளனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 24ம் தேதி ஓரே கட்டமாக லோக்சபா பொதுத் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 24ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி வரை நடக்கிறது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவுடன் அபிடவிட்டையும் தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதில் வேட்பாளர் மீதான கிரிமினல் வழக்குகளை குறிப்பிட வேண்டும். அதாவது தண்டனை பெற்ற வழக்குகள், நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் குறித்து தெரிவிக்க வேண்டும்.
வேட்பாளர், அவரது மனைவி, குழந்தைகளின் வருமான வரி கணக்கு எண், வருமான வரி தாக்கல் செய்த நாள், அசையும், அசையா சொத்துகள், அவரது மனைவி, குழந்தைகள் பெயரில் அரசு, அரசு சாரா நிறுவனங்களில் வாங்கியகடன் விபரம், வேட்பாளர் மற்றும் மனைவியின் தொழில், அவர்களின் கல்வி தகுதி முதலியவற்றை அபிடவிட்டில் தெரிவிக்க வேண்டும்.
அபிடவிட்டில் எந்த கேள்விக்கும் பதில் அளிக்காமல் பூர்த்தி செய்யாமல் விடக் கூடாது. தேர்தல் நடத்தும் அலுவலர் அதை சரி பார்ப்பார். அப்போது பூர்த்தி செய்யாத இடங்களை பூர்த்தி செய்ய வலியுறுத்துவார். எல்லா கேள்விகளுக்கும் பதில் இல்லை, தெரியாது, பொருந்தாது என்றாவது தெரிவிக்க வேண்டும்.
தேர்தல் நடத்தும் அலுவலரின் அறிவுரைக்கு பின்னரும் அபிடவிட்டில் பூர்த்தி செய்யாத இடங்கள் இருந்தால் அந்த வேட்பாளரின் விண்ணப்பம் உடனடியாக தள்ளுபடி செய்யப்படும்.
அபிடவிட்டை வேட்பு மனுவுடன் சேர்ந்து தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு முடியாவிட்டால் வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாள் மாலை 3 மணிக்குள்ளாவது தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இதனால் குற்ற பின்னனியில் உள்ள வேட்பாள்கள் கதி கலங்கி போய் உள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications