காவிரி ஆற்றில் 2.45 லட்சம் கனஅடி உபரி நீர் வெளியேறும் அபாயம்.. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை
Recommended Video

சென்னை: காவிரி ஆற்றிலிருந்து 2.45 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
கேரளம் மற்றும் கர்நாடகத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பிவிட்டன. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் காவிரி நீர் பாயும் அணைகளும், ஆறுகளும் நிரம்பிவிட்டன.
இந்நிலையில் காவிரி ஆற்றிலிருந்து 2.45 லட்சம் கனஅடி நீர் வெளியேற்ற வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில் கூறுகையில், காவிரி ஆற்றிலிருந்து 2.45 லட்சம் கனஅடி நீர் வெளியேற வாய்ப்புள்ளது.
வரலாறு
இதனால் காவிரி கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள். 2005-ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது காவிரியாற்றில் கரைபுரளும் வெள்ளத்தால் சாதனை படைத்துள்ளது. காவிரியில் 1858, 1896, 1906, 1911, 1920, 1924, 1961, 1977, 1993, 2005 மற்றும் தற்போது 2018 ஆகிய ஆண்டுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியுள்ளது.

கேஆர்எஸ் அணை
கடந்த 1924-ஆம் ஆண்டு காவிரியில் 4.5 லட்சம் கனஅடி நீர் வந்துள்ளது. இதுதான் இன்று வரை சாதனையாக உள்ளது. ஹாரங்கி அணையில் 34,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. ஹேமாவதி அணைக்கு 25,000 கனஅடி நீர் வரத்தும், 30,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த 66000 கனஅடி நீர் கேஆர்எஸ் அணைக்கு செல்லும்.

மேட்டூர் அணைக்கு
அதுபோல் கேஆர்எஸ் அணைக்கு 1,23,000 கனஅடி நீர் வரத்தும் 1,23,000 கனஅடி நீர் வெளியேற்றமும், கபினி அணைக்கு 56,000 கனஅடி நீர் வரத்தும் 52000 கனஅடி வெளியேற்றமும், ஆக மொத்தம் 1,75,000 கனஅடி நீர் மேட்டூர் அணைக்கு செல்கிறது. இதன் அளவு மேலும் அதிகரிக்கும்.

காவிரிக்கு 2.45 லட்சம்
அதுபோல் மேட்டூர் அணைக்கு 1.70 லட்சம் கனஅடி நீர் வரத்தும் அதே அளவு வெளியேற்றமும், பவானிசாகர் மற்றும் அமராவதி அணைக்கு 35,000 கனஅடி நீர் வரத்தும், அதே அளவுக்கு வெளியேற்றமும் , பவானி சாகர் அணைக்கு 40000 கனஅடி நீர் வரத்தும் 50000 கனஅடி நீர்வெளியேற்றமும் உள்ளன. மொத்தம் 2.45 லட்சம் கனஅடி நீர் காவிரிக்கு செல்கிறது.

மீண்டும் மழை
இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். எர்ணாகுளம், திரிச்சூர், வால்பாறை பகுதிகளுக்கு மேல் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இடுக்கி நோக்கி செல்கிறது. இதனால் கேரளம் மற்றும் வால்பாறையில் இன்றும் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications