கோவை குட்கா: அமைச்சர் வேலுமணி மீது வழக்கு பதிவு செய்வதே நியாயம் - ஸ்டாலின்
குட்கா விவகாரத்தில் அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Recommended Video

கோவை: குட்கா ஆலை விவகாரத்தில் நியாயமாக பார்த்தால் அமைச்சர் வேலுமணி, எஸ்.பி மூர்த்தி ஆகியோர் மீதுதான் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் காட்டமாக தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்து ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் பேசும்போது, குட்கா ஆலை விவகாரத்தில் நியாயமாக பார்த்தால் அமைச்சர் வேலுமணி , எஸ்.பி மூர்த்தி ஆகியோர் மீதுதான் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும், ஆனால் , நியாயத்திற்கு போராடியதிற்கு திமுக மீது வழக்கு போட்டு கைது செய்தது சர்வாதிகாரம் போன்றது என்றார்.

மேலும் குட்கா விவகாரத்தில் சம்பந்தப்பட்ட டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் , அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சிறைக்கு செல்வதை மறைப்பதற்காக இதெல்லாம் நடைபெறுவதாகவும், இந்த விவகாரத்தில் சி.பி.ஐ உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்து வரும் தி.மு.க ஆட்சியில் இவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
குட்கா ஆலைக்குள் காவல்துறை அதிகாரிகள் மட்டும் 5 மணி நேரத்திற்கும் மேலாக இருந்தது குறித்த கேள்விக்கு , காவல்துறை தலைவரே இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் அவரை காப்பாற்ற இது போன்ற நாடகம் நடத்தப்படுகிறது என்றார். தொடர்ந்து, குட்கா விவகாரத்தில் உள்ளூர் அமைச்சருக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறதே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நிச்சயமாக சம்பந்தம் உள்ளது என்று ஸ்டாலின் பதிலளித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications