சேகர் ரெட்டிக்கு ரூ.2000 நோட்டுகள் தந்த வங்கி அதிகாரிகள் யாரும் கைது இல்லை ஏன்? ஹைகோர்ட் சுளீர்
சேகர் ரெட்டிக்கு பல கோடி ரூபாய் 2,000 நோட்டுகளை வாரி கொடுத்த வங்கி அதிகாரிகள் சிக்குகிறார்கள். இந்த அதிகாரிகளை இதுவரை ஏன் கைது செய்யவில்லை என்பது சிபிஐ கோர்ட் கேள்வி.
சென்னை: போயஸ் கார்டனுக்கு மிகவும் நெருக்கமான கான்டிராக்டர் சேகர் ரெட்டிக்கு புதிய ரூ2,000 நோட்டுகளைக் கொடுத்த வங்கி அதிகாரிகள் யாரையும் இதுவரை கைது செய்யாதது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழக அரசின் முதன்மை கான்டிராக்டர் சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ரூ131 கோடி ரொக்கம், 171 கிலோ தங்கம் சிக்கியது. ரூ131 கோடியில் ரூ34 கோடி புதிய ரூ2,000 நோட்டுகளாகும்.

இதையடுத்து சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது அமலாக்கத்துறை, சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த விசாரணையின் முடிவில் சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை காவலில் வைத்து விசாரிக்க கோரி சிபிஐ தாக்கல் செய்த மனு மீது சென்னை சிபிஐ கூடுதல் செசன்சு நீதிமன்ற நீதிபதி வெங்கடாசாமி முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. அப்போது, சேகர் ரெட்டி உள்ளிட்டோருக்கு புதிய ரூ2,000 நோட்டுகள் இவ்வளவு எப்படி கிடைத்தது?
ரூபாய் நோட்டுகளின் எண்களை குறிப்பிட்டு தான் ரிசர்வ் வங்கி, பிற வங்கிகளுக்கு விநியோகம் செய்யும். அப்படியானால் யார் யாருக்கு? யார் மூலம் புதிய ரூபாய் நோட்டுகள் சென்றது? என்பதை எளிதாக கண்டறிய முடியும்.
வங்கி உயர் அதிகாரிகள் தொடர்பு இல்லாமல் சேகர் ரெட்டி போன்றோருக்கு பல கோடி ரூபாய் புதிய நோட்டுகள் கிடைத்திருக்காது. அவர்களை இதுவரை கைது செய்யப்படவில்லையே ஏன்? அவர்களையும் கைது செய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும். சேகர் ரெட்டி உள்ளிட்டோரை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதிக்கிறேன் என்றார்.
அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 2 நாட்களுக்குள் சேகர் ரெட்டிக்கு உதவிய வங்கி அதிகாரிகள் பெயர் தாக்கல் செய்யப்படும் என்றார். இதனால் சேகர் ரெட்டிக்கு உதவிய வங்கி உயர் அதிகாரிகளும் விரைவில் சிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications