சேகர் ரெட்டிக்கு ரூ.2000 நோட்டுகள் தந்த வங்கி அதிகாரிகள் யாரும் கைது இல்லை ஏன்? ஹைகோர்ட் சுளீர்
சேகர் ரெட்டிக்கு பல கோடி ரூபாய் 2,000 நோட்டுகளை வாரி கொடுத்த வங்கி அதிகாரிகள் சிக்குகிறார்கள். இந்த அதிகாரிகளை இதுவரை ஏன் கைது செய்யவில்லை என்பது சிபிஐ கோர்ட் கேள்வி.
சென்னை: போயஸ் கார்டனுக்கு மிகவும் நெருக்கமான கான்டிராக்டர் சேகர் ரெட்டிக்கு புதிய ரூ2,000 நோட்டுகளைக் கொடுத்த வங்கி அதிகாரிகள் யாரையும் இதுவரை கைது செய்யாதது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழக அரசின் முதன்மை கான்டிராக்டர் சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ரூ131 கோடி ரொக்கம், 171 கிலோ தங்கம் சிக்கியது. ரூ131 கோடியில் ரூ34 கோடி புதிய ரூ2,000 நோட்டுகளாகும்.

இதையடுத்து சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது அமலாக்கத்துறை, சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த விசாரணையின் முடிவில் சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை காவலில் வைத்து விசாரிக்க கோரி சிபிஐ தாக்கல் செய்த மனு மீது சென்னை சிபிஐ கூடுதல் செசன்சு நீதிமன்ற நீதிபதி வெங்கடாசாமி முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. அப்போது, சேகர் ரெட்டி உள்ளிட்டோருக்கு புதிய ரூ2,000 நோட்டுகள் இவ்வளவு எப்படி கிடைத்தது?
ரூபாய் நோட்டுகளின் எண்களை குறிப்பிட்டு தான் ரிசர்வ் வங்கி, பிற வங்கிகளுக்கு விநியோகம் செய்யும். அப்படியானால் யார் யாருக்கு? யார் மூலம் புதிய ரூபாய் நோட்டுகள் சென்றது? என்பதை எளிதாக கண்டறிய முடியும்.
வங்கி உயர் அதிகாரிகள் தொடர்பு இல்லாமல் சேகர் ரெட்டி போன்றோருக்கு பல கோடி ரூபாய் புதிய நோட்டுகள் கிடைத்திருக்காது. அவர்களை இதுவரை கைது செய்யப்படவில்லையே ஏன்? அவர்களையும் கைது செய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும். சேகர் ரெட்டி உள்ளிட்டோரை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதிக்கிறேன் என்றார்.
அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 2 நாட்களுக்குள் சேகர் ரெட்டிக்கு உதவிய வங்கி அதிகாரிகள் பெயர் தாக்கல் செய்யப்படும் என்றார். இதனால் சேகர் ரெட்டிக்கு உதவிய வங்கி உயர் அதிகாரிகளும் விரைவில் சிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications