For Daily Alerts
Just In
சென்னையில் அடுக்குமாடி கட்டிட சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி!
சென்னை: சென்னையின் மையப்பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி ஒருவர் பலியாகியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றின் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இன்று பிற்பகல் அந்த கட்டிடத்தின் அருகே உள்ள குடிசையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர் மீது புதியதாக கட்டப்பட்ட சுவர் இடிந்து விழுந்துள்ளது.
இதில் இடிபாடுகளில் சிக்கி மூதாட்டி உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்டிடப் பணிகளில் ஈடுபட்டோர் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டனர்.
Comments
English summary
One woman was killed today after a building collapsed in Nugambakkam area of Chennai in Tamilnadu.