கடந்த ஆண்டை விட அதிகம் தேர்ச்சி பெற்று சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் அபார சாதனை!
பிளஸ் 2 தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளிகள் கடந்த ஆண்டைக் காட்டிலும் 2.5. சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளது.
சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 88.7 ஆகும். அதாவது கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 2.5 சதவீதம் கூடுதலாகும்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. முன்னதாக, தேர்வு முடிவுகள் ரேங்க் அடிப்படையில் வெளியிடப்படாது என்றும், மாணவர்களின் மன உளைச்சலை தடுக்க இந்த முயற்சி என்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

அதன்படி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் எந்த வித ஆரவாரமுமின்றி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் போல் சைலன்ட்டாக வெளியானது. இந்த முறையை பெரும்பாலான மாணவர்கள் வரவேற்றனர்.
சென்னை பெருநகர மாநகராட்சியின் 32 மேல்நிலைப் பள்ளிகளில் 6,423 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில் 5,700 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி சதவீதம் 88.7 ஆகும். இது கடந்த ஆண்டை விட 2.5 சதவீதம் கூடுதல் ஆகும்.
பெரம்பூர் மார்க்கெட் தெருவில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சி.ஐ.டி. நகர் மேல்நிலைப்பள்ளி ஆகியவை 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன. அப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பரிசுகளை வழங்கினார்.
119 மாணவ-மாணவிகள் பல்வேறு பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 51 மாணவ-மாணவிகள் மட்டுமே 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றனர். 136 பேர் 1100 மதிப்பெண்களுக்கு மேலும், 524 பேர் ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றுள்ளனர்.
மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications