கடந்த ஆண்டை விட அதிகம் தேர்ச்சி பெற்று சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் அபார சாதனை!
பிளஸ் 2 தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளிகள் கடந்த ஆண்டைக் காட்டிலும் 2.5. சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளது.
சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 88.7 ஆகும். அதாவது கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 2.5 சதவீதம் கூடுதலாகும்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. முன்னதாக, தேர்வு முடிவுகள் ரேங்க் அடிப்படையில் வெளியிடப்படாது என்றும், மாணவர்களின் மன உளைச்சலை தடுக்க இந்த முயற்சி என்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

அதன்படி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் எந்த வித ஆரவாரமுமின்றி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் போல் சைலன்ட்டாக வெளியானது. இந்த முறையை பெரும்பாலான மாணவர்கள் வரவேற்றனர்.
சென்னை பெருநகர மாநகராட்சியின் 32 மேல்நிலைப் பள்ளிகளில் 6,423 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில் 5,700 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி சதவீதம் 88.7 ஆகும். இது கடந்த ஆண்டை விட 2.5 சதவீதம் கூடுதல் ஆகும்.
பெரம்பூர் மார்க்கெட் தெருவில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சி.ஐ.டி. நகர் மேல்நிலைப்பள்ளி ஆகியவை 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன. அப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பரிசுகளை வழங்கினார்.
119 மாணவ-மாணவிகள் பல்வேறு பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 51 மாணவ-மாணவிகள் மட்டுமே 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றனர். 136 பேர் 1100 மதிப்பெண்களுக்கு மேலும், 524 பேர் ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றுள்ளனர்.
மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications