வேதா நிலையத்தில் சீலிடப்பட்ட 2 அறைகள் திறக்கப்பட்டதா?... சந்தேகம் தீர்த்த ஆட்சியர்!
சென்னை போயஸ் கார்டனில் வேதா நிலையத்தில் சீலிடப்பட்ட 2 அறைகள் திறக்கப்பட்டதா என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video

சென்னை : போயஸ் கார்டனில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தில் சீலிடப்பட்ட 2 அறைகள் திறக்கப்பட்டதா என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் விளக்கம் அளித்துள்ளார். வேதா நிலையத்தை நினைவிடமாக மாற்றுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாக ஆட்சியர் அன்புச் செல்வன் கூறியுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தில் இன்று காலையில் திடீரென அதிகாரிகள் ஆய்வு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க போயஸ் கார்டனை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
காலை 8 மணி முதல் நடைபெற்ற இந்த ஆய்வின் முடிவில் மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :

நிலத்தை கையகப்படுத்தும் பணிகள்
ஆகஸ்ட் 5ல் ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக மாற்றும் அறிவிப்பை அரசு ஆணையாக வெளியிட்டது. அந்த அரசாணைப்படி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக்குவதற்கு நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

அளவிடும் பணிகள் நடந்தது
அதன் முதற்கட்டமாக வேதா நிலையத்தை கூட்டு ஆய்வு செய்யும் பணியை இன்று நடைபெற்றது. இந்த ஆய்வில் வருவாய்த்துறை அலுவலர்கள், நில அளவையர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், காவல்துறையினர்அடங்கிய குழு ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் போது வேதா நிலையத்தின் மொத்த நில அளவு, கட்டிடத்தின் பரப்பளவு போன்றவற்றை அளவிடும் பணிகள் நடைபெற்றது.

வருமான வரித்துறையினர் ஏன்?
வேதாநிலையத்தில் வருமான வரித்துறையால் 2 அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. எனவே இன்றைய ஆய்வு குறித்து முறையாக தகவல் தெரிவித்தோம். அதன் பேரில் வருமான வரித்துறையினரும் இன்றைய ஆய்வில் பங்கேற்றனர்.

சீலிடப்பட்ட அறைகளை திறக்கவில்லை
அவர்கள் முன்னிலையில் ஆய்வு நடந்தது வருமான வரித்துறையினர் சீல் வைத்த அறைகள் திறக்கப்படவில்லை. இதனை அதிகாரிகள் உறுதி செய்தனர் என்று அன்புச்செல்வன் தெரிவித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications