சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்க தேர்தல்.. தலைவராக மோகன கிருஷ்ணன் வெற்றி
சென்னை உயர் நீதிமன்ற வக்கீல்கள் சங்கத் தேர்தலில் தலைவராக ஜி.மோகனகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார்.
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கத்துக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான 3 ஆயிரத்து 784 வாக்குகளில், 2,106 வாக்குகள் பெற்று தலைவராக ஜி.மோகனகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார்.
வக்கீல்கள் சங்கத் தேர்தல் கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவி காலம் முடிவடைந்ததையடுத்து புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. கடந்த ஒரு வாரமாக உயர் நீதிமன்ற வளாகத்தில் தீவிர பிரசாரம் நடந்தது. தலைவர், துணை தலைவர், செயலாளர், பொருளாளர், நூலகர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 16 பதவிகளுக்கு 79 பேர் போட்டியிட்டனர்.

இதையடுத்து, நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 5 மணிவரை நடந்தது. மொத்தமுள்ள 4,777 வாக்குகளில் 3 ஆயிரத்து 784 வாக்குகள் பதிவாகின. பின்னர், வாக்கு பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பான அறைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

நேற்று காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல் சுற்றிலிருந்தே முன்னிலை வகித்த மோகன கிருஷ்ணன் 6வது சுற்றின் இறுதியில் 2,106 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அறிவழகன் 1,102 வாக்குகள் பெற்றார். இதைதொடர்ந்து, 1014 வாக்குகள் வித்தியாசத்தில் மோகனகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற வக்கீல் சங்கத்தின் புதிய தலைவராக ஜி.மோகனகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வெற்றியை கொண்டாடினார்கள்.

-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications