உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்
உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்தான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
சென்னை : உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்தது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிப்பை 2017 செப்டம்பர் 18க்குள் வெளியிட்டு, நவம்பர் 17ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்குமாறு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வு செப்டம்பர் 4ம் தேதி உத்தரவிட்டது.

ஆனால், அதன்படி தேர்தல் ஆணையம் எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் தேர்தல் ஆணையத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக தரப்பில் வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி வாதாடினார். வேண்டுமென்றே தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தாமதிக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை.
தொகுதி மறுசீரமைப்பு வரையறைக்காட்டி தேர்தல் தாமதப்படுத்தப்படுகிறது. தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தவேண்டும் என்று அரசை நிர்பந்திக்கவில்லை என்று வாதிடப்பட்டது. தேர்தலை வேண்டுமென்றே தேர்தல் ஆணையரும் , அதிகாரத்தில் இருப்பவர்களும் தாமதிக்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.
இதனை அடுத்து தேர்தல் ஆணையம் தனது தரப்பு வாதத்தை முன்வைத்தது. தமிழகத்தில் தேர்தலைத் தாமதிக்க தங்களுக்கு எந்தவித உள்நோக்கமும் இல்லை. தொகுதி மறுசீரமைப்புக்கான உரிமை தமிழக அரசிடம் உள்ளது. மறுசீரமைப்பு குறித்து அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதனால் தேர்தல் தாமதமாகத் தேர்தல் ஆணையம் காரணமில்லை. இதற்காக எங்களின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர எந்த முகாந்திரமும் இல்லை. இதனால் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கில் ஆஜராவதில் இருந்து தேர்தல் ஆணைய அதிகாரிகளை விடுவித்தனர். மேலும் வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications