அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் 3 மாதம் சிறை- சென்னை போலீஸ் எச்சரிக்கை
அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என சென்னை போலீஸ் எச்சரித்துள்ளது.
Recommended Video
சென்னை: அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டினால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1-ந் தேதி முதல் வாகனங்களை ஓட்டுவோர் அசல் ஓட்டு உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் இது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது. இது தொடர்பான செய்தி குறிப்பு:
சென்னையில் செப்.1 முதல் வாகனங்களை ஓட்டும்போது, அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும். உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
செப்டம்பர் 1-ம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் 3 மாதம் சிறையுடன் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். சீருடை அணிந்த எந்த காவல் துறை அதிகாரியும் வாகன ஓட்டுநர்களின் அசல் உரிமத்தை கேட்கும்போது காண்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.