முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
சென்னை: சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் சென்னை வர்த்தக மையத்திற்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப் பட்டுள்ளது.
தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு இன்றும், நாளையும் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள, வெளிநாடுகளில் இருந்து சுமார் 3,000க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் சென்னை வந்துள்ளனர். இவர்கள் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.
மாநாட்டையொட்டி, சென்னை நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

5 அடுக்கு பாதுகாப்பு...
மாநாடு நடைபெறும் வர்த்தக மையத்திலும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் சிறப்பு கமாண்டோ படை வீரர்கள் உள்பட 3000க்கும் அதிகமான போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். சென்னை வர்த்தக மையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப் பட்டுள்ளது. அதிவிரைவு படையினர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தயார் நிலையில் நிபுணர்கள்...
18 தனிப்படை கொண்ட வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் தயார் நிலையில் உள்ளனர். மாநாட்டு வளாகத்தில், மின்சாரம் தடைப்படாமல் கண்காணிக்க, 200 மின் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விமான நிலையத்திற்கு பாதுகாப்பு...
தொழிலதிபர்கள் தொடர்ந்து சென்னைக்கு வந்த வண்ணம் இருப்பதால் சென்னை விமான நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. தொழிலதிபர்கள் தங்கியுள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப் பட்டுள்ளது.

போக்குவரத்து ஏற்பாடுகள்...
மாநாடு நடக்கும் இடத்துக்கு வெளிநாட்டு தொழிலதிபர்கள் வந்து செல்ல, 'ஏசி' வால்வோ பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாநாடு நடக்கும் நந்தம்பாக்கம், போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

அடையாள அட்டை...
பாதுகாப்பு பணியில் உள்ள போலீசாருக்கு, புகைப்படத்துடன் கூடிய, சிவப்பு கோடிட்ட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதிகாரிகளுக்கும், தனியார் நிறுவனத்தினருக்கும், பச்சை மற்றும் காபி நிற, கோடிட்ட புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை இல்லாதவர்கள், வர்த்தக அரங்குக்குள் செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications