காய்ச்சலுக்காக வந்த சிறுவனுக்கு துப்புரவு பணியாளர் சிகிச்சை.. மதுரை மருத்துவமனையின் அவலம்
காய்ச்சலுக்காக வந்த சிறுவனுக்கு துப்புரவு பணியாளர் ஒருவர் சிகிச்சை பார்த்த அவலம் மதுரை அருகே கருங்காலப்பட்டி அரசு ஆரம்ப சுகாதாரநிலைய மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது.
மதுரை: காய்ச்சலுக்காக மதுரையை அடுத்த கருங்காலபட்டியில் அரசு சுகாதார மருத்துவமனைக்கு வந்த சிறுவனுக்கு துப்புரவு பணியாளர் சிகிக்சை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு குழந்தைகள், பெரியவர்கள், இளைஞர்கள் என பெரும்பாலானோர் உயிரிழந்த சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒரு நாளைக்கு குறைந்தது 5 பேராவது உயிரிழக்கின்றனர்.
தமிழக அரசும் 3 நாள்கள் தொடர்ந்து காய்ச்சல், தலைவலி, உடல்வலி ஆகியவை இருந்தால் அரசு மருத்துவமனைக்கு வாருங்கள் என்று அழைக்கிறது. ஆனால் அரசு மருத்துவமனைக்கு சென்றால் அங்கு மருத்துவர்கள் பணியில் இருப்பதில்லை என்று மக்கள் புகார் கூறுகின்றனர்.

மருத்துவர்கள் இல்லை
சுகாதார நிலையங்களில் செவிலியர்கள்தான் சிகிச்சை அளிக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள கருங்காலக்குடி ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு காய்ச்சலுக்காக இன்று காலை ஒரு சிறுவன் வந்திருந்தார். அப்போது பணியில் மருத்துவர்களும், இல்லை என்று கூறப்படுகிறது.

துப்புரவு பணியாளர் ஊசி
இதனால் அங்கிருந்த துப்புரவு பணியாளர் பொன்னுதாயி அந்த சிறுவனுக்கு ஊசி போட்டு மேலும் சில மாத்திரைகளை அந்த சிறுவனின் தந்தையிடம் கொடுத்து சாப்பிட வைக்குமாறு கூறியுள்ளார். மிகவும் கைதேர்ந்தவரை போல் ஊசி போடுவது, மருந்து மாத்திரைகளை அளிப்பது போன்றவற்றை பார்க்கும் போது அந்த பணியாளருக்கு ஏற்க அனுபவம் இருப்பதாக தெரிகிறது.

உரிய பதில் இல்லை
மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாத சமயங்களில் நோயாளிகளை சமாளிக்க துப்புரவு பணியாளருக்கு இவர்கள் பயிற்சி கொடுத்துள்ளது போன்ற தெரிகிறது. 24 மணி நேரமும் இயங்கக் கூடிய ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாதது குறித்து கேட்டால் உரிய பதில் கிடைப்பதில்லை என்கின்றனர் பொதுமக்கள்.
|
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் மதுரை மாவட்டத்தில் உயிரிழப்புகள் நிகழ்ந்து வரும் நிலையில் துப்புரவு பணியாளருக்கு மருத்துவ பயிற்சி அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரியுள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications