நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் துப்பரவு தொழிலாளர்கள்... செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அவலம்
மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
சென்னை: மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டில் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியானது கடந்த 1965-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு எம்பிபிஎஸ், முதுகலை பட்டப்படிப்பு, பாரா மெடிக்கல் பாடப்பிரிவுகள் உள்ளிட்டவை கற்பிக்கப்படுகின்றன.
மெட்ராஸ் மெடிக்கல் காலேஜுக்கு அடுத்த படியாக செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி கருதப்படுகிறது. இங்கு மருத்துவமனையும் சேர்ந்து இயங்கி வருகிறது.

நிபுணத்துவம் என்ன?
தலைமை மருத்துவமனையான இங்கு மகப்பேறு, குழந்தை மருத்துவம், கண் மருத்துவம், மனநிலை மருத்துவம், நரம்பியல், இதயவியல், சிறுநீரகவியல், குழந்தைகள் அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் சர்ஜரி, நெப்ராலஜி உள்ளிட்ட சிறப்பு பிரிவுகள் உள்ளன.

மக்கள் கூட்டம்
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு இணையாக ஏராளமான வசதிகள் இருப்பதால் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் புறநோயாளிகளாகவும், அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இங்கு எந்நேரமும் மக்கள் கூட்டம் காணப்படும்.

பரிசோதனை கூடங்கள்
இந்த மருத்துவமனையில் 600 படுக்கை வசதி கொண்டதாகும். மேலும் இசிஜி, எக்ஸ் ரே, ரத்த பரிசோதனை உள்ளிட்ட சோதனை மேற்கொள்ளும் ஆய்வகங்கள் உள்ளன. இத்தனை வசதிகள் கொண்ட இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை மேற்கொள்ள செல்வது கடினமாக இருக்கிறது.

துப்புரவு தொழிலாளர்கள் சிகிச்சை
இங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு செவிலியர்களுடன் சேர்ந்து துப்புரவு தொழிலாளர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினால் மருத்துவர்கள் இல்லை என்ற பதில் மட்டுமே வருகிறது. மேலும் மகப்பேறுகளிலும் துப்புரவாளர்களை பயன்படுத்துவதால் நோயாளிகள் அச்சமடைந்துள்ளனர்.

பொதுமக்கள் கருத்து
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தமிழகத்தில் நடைபெற்று வரும் நிலையற்ற அரசால் நோயாளிகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து விதமான சிகிச்சைகளையும் இவர்கள் அளிப்பதால் நோயாளிகள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். இவர்களுக்கு என்ன தெரியும். இவர்களை சிகிச்சை அளிக்க அனுமதித்துள்ளனர். எனவே தமிழக அரசு போர்க் கால அடிப்படையில் மருத்துவர்களை நியமித்து நோயாளிகளின் அச்சத்தை போக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications