சட்டசபை நிறைவு: ஜெயலலிதா நினைவிடத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக அஞ்சலி
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் மரியாதை செலுத்தினர்.
சென்னை: தமிழக சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதம் நிறைவடைந்த நிலையில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் இணைந்து அஞ்சலி செலுத்தினர்.
இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த 8ம் தேதி தொடங்கியது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை முடிந்த நிலையில் அதன் மீதான விவாதம் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வந்தன.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரனும் சட்டசபையில் தனது பங்கிற்கு பேசினார். வெளிநடப்பு செய்து ஆளும் கட்சி மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
இந்நிலையில் ஆளுநர் உரையில், அரசின் சாதனைகள், புதிய திட்டங்களை குறித்தும், செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் விவாதம் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்தினர். கடைசி நாளான இன்று எம்எல்ஏ ஊதிய உயர்வு மசோதா குறித்து காரசார விவாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.