யார் பேச்சையும் கேட்காதீங்க.. விரும்பியது நடக்கும்.. அதிருப்தியாளர்களுக்கு எடப்பாடியார் அட்வைஸ்
Recommended Video
சென்னை: எடப்பாடி தரப்புக்கு என்ன செய்றதுன்னே தெரியல.. பேசாமல் அதிருப்திகளிடமே பேச்சை ஆரம்பித்து விட்டார்.
ரிசல்ட்டுக்கு பிறகு அதிமுக கொஞ்சம் அமைதி காத்தே வருகிறது. ஒருபுறம் மத்திய அமைச்சரவையில் சீட் இல்லாமல் போய்விட்டதே, தமிழகத்துக்கு என்று ஒரு அங்கீகாரமே இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளோமே என்ற மனக்குமுறல் உலாவுகிறது.
மற்றொரு பக்கம், திமுக படுவேகம் எடுத்து வருகிறது. அதனால் எப்போ, என்ன செய்யுமோ, ஆட்சிக்கு பாதிப்பு வருமோ, என்ற பீதியும் அடிவயிற்றில் கிளம்பி உள்ளது.

தாராளங்கள்
இதற்கு நடுவில் அதிமுக எம்எல்ஏக்களை திமுக தன் பக்கம் இழுக்க முயற்சிக்கிறது என்ற தகவல் அடிக்கடி வந்து கொண்டிருக்கிறது. வெறும் முயற்சி என்றால்கூட பரவாயில்லையே, 10 எம்எல்ஏக்கள், 15 எம்எல்ஏக்கள் என்பது போலவும், இவர்களுக்கு கோடிக்கணக்கில் தாராளங்கள் காட்டப்படவும் திமுக தயாராக உள்ளதாகவும் செய்திகள் கசியவும் எடப்பாடி தரப்புக்கு வயிற்றில் புளியே கரைத்துவிட்டதுபோல் ஆகிவிட்டது.

பொறுப்பாளர்கள்
என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. நேற்று முதல்வர் திடீரென தனது வீட்டில் நிர்வாகிகளை வரவழைத்துவிட்டார், தேர்தல் பொறுப்பாளர்கள், வேட்பாளர்களும் ஆஜர் ஆயினர். இதில் முதல்நபராக வந்து கலந்து கொண்டதே ஓபிஎஸ்தான்!

பாஜக கோபம்
தொகுதிகளில் நாம் எதற்காக தோற்று போனோம் என்ற முதல் கேள்வியில் இருந்து தொடங்கினார் முதல்வர். ஆளுக்கு ஒரு கருத்து, புகார், என அள்ளி வீசினார்கள். இதன்மூலம் எல்லாருமே அரசு மீது கோபமாக உள்ளனர் என்பது தெளிவானது. அதுமட்டுமில்லை.. எந்தஅளவுக்கு மக்களுக்கு பாஜக மீது கோபம் உள்ளது என்பதையும் முதல்வரால் அவர்கள் சொன்னதில் இருந்தே புரிந்து கொள்ள முடிந்தது.

இடம் தர வேணாம்
இருந்தாலும், நம்பிக்கை இல்லா தீர்மானம், ஆட்சி கவிழ்ப்பு, கட்சி தாவல் போன்ற சமாச்சாரங்களை பற்றியும் முதல்வரே நிர்வாகிகளிடம் விரிவாக பேசியுள்ளார். "நம்ம கட்சியில் இப்படியெல்லாம் ஒரு பேச்சு அடிபடுகிறது. இந்த சமயத்தில்தான் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும், ஏற்கனவே தோற்று போயுள்ளதை எதிர்க்கட்சிகள் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளவே முயற்சிப்பார்கள். அதுக்கு நாம இடம் தரக்கூடாது.

அட்வைஸ்
உங்களுக்கு என்ன பிரச்சனைகள் இருக்கோ அதையெல்லாம் நானும் ஓபிஎஸ்-ம் பார்த்துக்கறோம். ஆனால் நம்ம அரசு எந்தவித தடங்கலும் இல்லாமல் 2 வருஷம் நடக்கணும். அங்க, இங்க தாவுவதால், மக்கள்கிட்ட மேலும் கட்சி பலவீனமடையாமல் பார்த்து கொள்ளுங்கள்" என்று அட்வைஸ் செய்திருக்கிறார்.

ஒத்துழைப்பு
முதல்வர் இப்படி கூப்பிட்டு வைத்து அறிவுரை சொல்லவும், கோபம், அதிருப்தியில் சென்ற நிர்வாகிகள், வேட்பாளர்களுக்கு இழந்த பலம் திரும்பி வந்ததாம். தங்களால் முடிந்த ஒத்துழைப்பை தருகிறோம், ஆட்சிக்கு எதுவும் வந்துவிடாது என்று நம்பிக்கை தெரிவித்துவிட்டு கிளம்பி சென்றார்களாம்!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications