கோவையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தந்தை உள்பட 4 பேருக்கு ஆயுள் சிறை
கோவையில் 10 சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரை அடுத்து சிறுமியின் தந்தை உள்பட 4 பேருக்கு கோவை நீதிமன்றம் ஆயுள் சிறை விதித்துள்ளது.
Recommended Video

கோவை: கோவையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை உள்பட நான்கு பேருக்கு மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
கோவை இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் ஏசுதாஸ் (57). இவருக்கு மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ளனர். இவரது மகள், அதே பகுதியில் உள்ள பள்ளியில் கடந்த 2015ம் ஆண்டு 4ம் வகுப்பு படித்து வந்தார். ஏசுதாஸ் கூலி வேலைக்குச் சென்று வந்தார்.

அப்போது வீட்டில் தனியாக இருந்த தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் (19), பாலன் என்கிற பாலகிருஷ்ணன் (33), ரவிக்குமார் என்கிற ஸ்டேன்லி (27) ஆகியோரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
இதுகுறித்து அந்த சிறுமி, பள்ளி ஆசிரியரிடம் தெரிவித்தார். அவர்கள் குழந்தைகள் உதவி மையமான சைல்ட் லைன் மற்றும் கோவை அனைத்து மகளிர் காவல் நிலையம் (கிழக்கு) பிரிவுக்கும் தெரிவித்தனர்.
இது குறித்து விசாரணை நடத்திய காவல் துறையினர் ஏசுதாஸ், பிரேம்குமார், பாலகிருஷ்ணன், ஸ்டேன்லி ஆகியோர் மீது குழந்தைகள் பாலியல் தாக்குதல் தடுப்புச் சட்டம் (போஸ்கோ) பிரிவில் வழக்குப் பதிவு செய்து நான்கு பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கின் மீதான இறுதிக் கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி அல்லி தீர்ப்பு வழங்கினார். இதில், குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார். இந்தத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications