மணல் கொள்ளையை தடுக்க முயன்ற காவலர் படுகொலை!
அரக்கோணம்: வேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகே மணல் கடத்தலை தடுத்த தலைமைக் காவலரை மணல் கொள்ளை கும்பல் ஒன்று டிராக்டர் ஏற்றி படுகொலை செய்துள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் அருகே காஞ்சிபுரம் மாவட்ட எல்லையில் குசஸ்தல ஆற்றில் மணல் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து, தலைமைக் காவலர் கனகராஜ் ஞாயிறன்று காலை சோதனையில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, மணல் ஏற்றி வந்த டிராக்டர் ஒன்றை காவலர் கனகராஜ் மறித்துள்ளார். ஆனால் வண்டியை நிறுத்தாத மணல் கடத்தல் கும்பல், அவர் மீது டிராக்டரை ஏற்றிக் கொலை செய்துள்ளது.
தகவல் அறிந்த வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். சம்பவ இடத்திற்கு வடக்கு மண்டல ஐ.ஜி மஞ்சுநாதா உள்ளிட்ட உயர்போலீஸ் அதிகாரிகள் விரைந்து விசாரணை மேற்கொண்டனர். தப்பியோடிய குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட காவலரின் உடல் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டதால் பதற்றம் ஏற்பட்டது.
இதனிடையே, காவலரை கொலை செய்ய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வலியுறுத்தியுள்ளார்.
காவலர் கொல்லப்பட்ட இதே தக்கோலம் பகுதியில், ஏற்கனவே வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் மீதும் மணல் கடத்தல் கும்பல் தாக்குதல் நடத்தியிருக்கிறது.
தக்கோலம் பகுதியில் அதிக அளவில் மணல் கொள்ளை நடைபெறுவதாகவும், இதனைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மணல் கடத்தலை தடுக்க முயன்ற காவலர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications