ஜெயலலிதா பிரதமராக இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு தரும்- நல்லக்கண்ணு

விழுப்புரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று," பல்வேறு துறைகளில் அந்நிய முதலீட்டை மத்திய அரசு அனுமதித்திருப்பதன் மூலம் இந்தியாவின் இறையாண்மைக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி என்று கூறுகின்றனர். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் அனைவரும் சேர்ந்துதான் பிரதமரை தேர்வு செய்ய வேண்டும். ஆனால் முன் கூட்டியே பிரதமர் வேட்பாளரை அறிவிப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது. இது நரேந்திர மோடிக்கும் பொருந்தும்.
இந்தியா பல்வேறு இன, மத மக்கள் வாழும் நாடு. ஆனால் பாஜக மதவெறியை தூண்டிவிடுகிறது. அம்பானி போன்றோருக்கு ஆதரவாக எரிபொருள் நிறுவனங்கள் தன்னிச்சையாக விலையை உயர்த்திக் கொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதனை பாஜகவோ, நரேந்திர மோடியோ எதிர்க்கவில்லை.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 3-வது அணியை உருவாக்கி வருகிறோம். அதற்காக தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளோம். வேறு சில கட்சிகளும் எங்கள் கூட்டணியில் இணைந்துள்ளன.
ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்று அதிமுகவினர் பேசுவது நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதுபோன்ற சூழல் உருவானால் அதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கும் " என்றார் அவர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications