தமிழ் புத்தாண்டில் மானத்தை வாங்கிய தமிழர்கள்.. சேலத்தில் ரசிகர்களிடம் படாதபாடு பட்ட கீர்த்தி சுரேஷ்
இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் கடைக்குள் விரைந்து சென்று கீர்த்தி சுரேஷை உடனே அங்கிருந்து சென்றுவிடுமாறு கேட்டுக்கொண்டார். போலீசாரின் கோரிக்கையை ஏற்று அவசரமாக கீர்த்தி சுரேஷ் வெளியேறினார்.
சேலம்: சேலத்தில் நடிகை கீர்த்தி சுரேஷை பார்க்க திரண்ட ரசிகர்களால் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் லேசான தடியடி நடத்தி ரசிகர்களை கட்டுப்படுத்தினர்.
சேலத்திலுள்ள ஏ.வி.ஆர் ஸ்வர்ண மகால் நிறுவனம், எலைட் ஷாப்பை, ஓமலூர் சாலையிலுள்ள புதிய பஸ் நிலையம் அருகே இன்று திறந்தது. இதில் நடிகை கீர்த்தி சுரேஷ் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து அறிந்ததும் ரசிகர்கள் குஷியடைந்தனர். காலை 9 மணிக்கே ரசிகர்கள் நகைக்கடை முன்பாக, திரண்டனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால் கயிறு கட்டி போலீசார் ஒழுங்கு படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

ரசிகர்கள் மீது தடியடி
நகைக் கடைக்கு, கீர்த்தி சுரேஷ் கார் வந்ததும், ரசிகர்கள் மேலும் முண்டியடித்து முன்னேறினர். நகைக் கடைக்குள் அவர்கள் நுழைய முயன்றனர். இதனால் ரசிகர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

கூட்டம் ஏறியது
விழாவில் பங்கேற்று லேசாக நடனம் ஆடிக் காண்பித்தார் கீர்த்தி சுரேஷ். ரசிகர்கள் அதை பக்கத்து பில்டிங்குகளில் ஏறி நின்று பார்த்து கை தட்டி ரசித்தனர். இதன்பிறகு கீர்த்து சுரேஷ் கடைக்குள் சென்று சுற்றி பார்த்தார். இந்த கேப்பில் அவர் வந்த செய்தி வேகமாக பரவியதால் ஓமலூர் சாலையில் ரசிகர்கள் மேலும், மேலும் கூடினர்

நோயாளிகளுக்கு அவதி
அரசு மருத்துவமனை அமைந்துள்ள அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் நோயாளிகள் அவதிப்பட்டனர். கோபமடைந்த போலீசார், முண்டியடித்த ரசிகர்களை சாத்தி எடுக்க ஆரம்பித்தனர். ஆனால் ரசிகர்களோ ஒரு இஞ்ச் கூட நகருவதாக இல்லை. கீர்த்தி சுரேஷ் வெளியே வர வேண்டும், அவரை பார்த்தால்தான் வீட்டுக்கு திரும்புவோம் என கூறி அந்த இடத்தையே போராட்ட களமாக மாற்றினர்.

அவசர வெளியேற்றம்
மேலும், ரசிகர்கள் அனைவரும் செல்போன்களில் நிகழ்ச்சியை வீடியோவாக எடுக்க முண்டியடித்ததால் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் கடைக்குள் விரைந்து சென்று கீர்த்தி சுரேஷை உடனே அங்கிருந்து சென்றுவிடுமாறு கேட்டுக்கொண்டார். போலீசாரின் கோரிக்கையை ஏற்று அவசரமாக கீர்த்தி சுரேஷ் வெளியேறினார். இதன்பிறகே நிலைமை சீரானது.

நயன்தாராவுக்காக குலுங்கியது
இப்படித்தான், 2 வருடங்ள் முன்பு, சேலத்தில் பிரபல துணிக்கடை ஒன்றின் திறப்புவிழாவில் பங்கேற்ற நடிகை நயன்தாரா வந்திருந்ததால், ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது நினைவிருக்கலாம். தமிழ் புத்தாண்டு தினமான இன்று, இப்படி தமிழர்கள் மானத்தை வாங்கிவிட்டனர் ரசிகர்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications