சம்பள பணம் வங்கியில் டெபாசிட்: பீடிக்கடையை முற்றுகையிட்ட பெண் தொழிலாளர்கள்
நெல்லை: நெல்லை அருகே பீடிக்கடையில் சம்பளத்தை ரொக்கமாக அளிக்காமல் வங்கியில் டெபாசிட் செய்வதால் பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து கடையை முற்றுகையிட்டனர்.
மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததை தொடர்ந்து நெல்லை அருகே உள்ள பீடிக்கடை நிறுவனங்கள் வாரம் தோறும் வழங்கி வந்த சம்பள பணத்தை வரும் மூன்று மாதங்களுக்கு வங்கி கணக்கு மூலம் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக 15 தொழிலாளர்களிடம் பீடி நிறுவனம் ஒப்புதல் கடிதம் வாங்கியுள்ளது. இதில் வரவு செலவு போக மீதி உள்ள சம்பள பணத்தை வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய சம்மதிக்கிறேன் என கையெழுத்து போட்டுள்ளனர்.

வாரந்தோறும் வழங்கப்படும் கூலியை வைத்து தான் பெரும்பாலான குடும்ப செலவுகளை செய்து வருகின்றனர். இதனால் பெரும்பாலான பீடி தொழிலாளர்கள் இதை ஏற்க மறுத்துவிட்டனர். கூலியை ரொக்கமாக வழங்கக்கோரி நேற்று மாலை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கடையம் பகுதி பீடிக்கடையை திடீரென முற்றுகையிட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் கடையம் சப் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் சில்லறை தட்டுப்பாட்டால் இரண்டு வாரம் மட்டும் வங்கி மூலம் சம்பளத்தை பெற்றுக் கொள்ளுமாறும், பிறகு வழக்கம் போல் ரொக்கமாக தருவதாகவும் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் பொருட்டு யாரும் உறுதி மொழி கடிதம் கொடுக்க வேண்டாம் என கூறியதை அடுத்து பெண்கள் கலைந்து சென்றனர். இதே நிலை தான் பாவூசத்திரம், ஆலங்குளம் பகுதியில் நீடித்து வருவதாக கூறப்படுகிறது.
-
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications