வர்தா தாக்கம்.. வேளச்சேரியில் பயணிகளோடு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதா மாநகர பஸ்?
வர்தா புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சென்னை மாநகராட்சி பஸ் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டதாக வெளியான சமூக வலைத்தள வீடியோக்களை போலீசார் மறுத்துள்ளனர்.
சென்னை: வர்தா புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மாநகராட்சி பஸ் இழுத்துச் செல்லப்பட்டதாக வெளியான தகவலை போலீசார் மறுத்துள்ளனர்.
வர்தா புயல் காரணமாக சென்னையில், பெரும் காற்றுடன் மழை கொட்டி வருகிறது. இதனால் நகரமெங்கும் தெருவுக்கு ஒரு மரம் என்ற வீதத்தில் கணக்கில் அடங்காத மரங்கள் சாய்ந்தும், முறிந்தும் கிடக்கிறது.

இந்நிலையில், வேளச்சேரி மெயின்ரோடு பகுதியில் மாநகராட்சி பஸ் ஒன்று வெள்ளத்தில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டதாகவும், அதில் டிரைவருடன் சேர்த்து சுமார் 12 பேர் இருந்ததாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகின.
இதை உறுதிப்படுத்த 'ஒன்இந்தியாதமிழ்' முயற்சி மேற்கொண்டது. மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது, பஸ் விபத்தில் சிக்கியது தொடர்பான புகார் எதுவும் தங்களிடம் வரவில்லை என தெரிவித்தனர்.
இதையடுத்து வேளச்சேரி காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, வெள்ளம் எதுவும் ஏற்படவில்லை என்றும், மரங்கள்தான் ஏகப்பட்டது சரிந்ததாகவும், இருப்பினும் பஸ்களுக்கு எந்த சேதமும் ஏற்படாமல் பாதுகாத்துக் கொண்டதாகவும் விளக்கம் அளித்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications