சிவாஜி யாருக்கு சொந்தம் …. சட்டசபையில் ருசிகர விவாதம்
சென்னை: சிவாஜி கணேசன் எந்தக் கட்சிக்கும் சொந்தக்காரர் அல்ல. காங்கிரஸ் கட்சியே வேண்டாம் என்று தனியாக சென்றவர். காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி தமிழக முன்னேற்ற முன்னணியை தொடங்கினார் என்று ஜெயலலிதா கூறினார்.
சிவாஜி கணேசன் யாருக்குச் சொந்தம் என்று இன்று சட்டசபையில் ருசிகர விவாதம் நடைபெற்றது. சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டுவது குறித்து கருத்துக் கூறிய விஜயதாரணிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் பதில் அளித்த முதல்வர் இதனைத் தெரிவித்தார்.

நடிகர் சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு எம்.எல்.ஏக்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ விஜயதாரணி, சிவாஜி காங்கிரஸ் கட்சிக்காரர் என்பதால், அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கருத்துத் தெரிவித்தார்.
அதற்கு பதில் அளித்த ஜெயலலிதா, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எந்த ஒரு கட்சிக்கும் சொந்தமானவர் அல்ல. அவர் எந்த நாட்டுக்கும் சொந்தமானவர் அல்ல. இன்னும் சொல்லப்போனால், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கும், தமிழ் நடிகர்களை ரசிக்கும் தமிழர்களுக்கும் சொந்தமானவர் என்று கூறினார்.
நடிகர் சிவாஜி எந்த கட்சிக்கும் சொந்தக்காரர் அல்ல. காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி, தமிழக முன்னேற்றக் முன்னணி என்ற கட்சியை துவக்கினார். அவருக்கு நினைவிடம் அமைக்க காலதாமதம் ஆனதால் மணி மண்டபம் கட்ட அரசு முடிவு செய்திருந்தது என்றார்.
எனவே சிவாஜியை ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடைக்க முற்பட வேண்டாம் என்று சட்டசபை உறுப்பினரை கேட்டுக் கொள்கிறேன் என்று விளக்கம் அளித்தார் முதல்வர் ஜெயலலிதா.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications