சிவாஜி யாருக்கு சொந்தம் …. சட்டசபையில் ருசிகர விவாதம்
சென்னை: சிவாஜி கணேசன் எந்தக் கட்சிக்கும் சொந்தக்காரர் அல்ல. காங்கிரஸ் கட்சியே வேண்டாம் என்று தனியாக சென்றவர். காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி தமிழக முன்னேற்ற முன்னணியை தொடங்கினார் என்று ஜெயலலிதா கூறினார்.
சிவாஜி கணேசன் யாருக்குச் சொந்தம் என்று இன்று சட்டசபையில் ருசிகர விவாதம் நடைபெற்றது. சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டுவது குறித்து கருத்துக் கூறிய விஜயதாரணிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் பதில் அளித்த முதல்வர் இதனைத் தெரிவித்தார்.

நடிகர் சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு எம்.எல்.ஏக்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ விஜயதாரணி, சிவாஜி காங்கிரஸ் கட்சிக்காரர் என்பதால், அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கருத்துத் தெரிவித்தார்.
அதற்கு பதில் அளித்த ஜெயலலிதா, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எந்த ஒரு கட்சிக்கும் சொந்தமானவர் அல்ல. அவர் எந்த நாட்டுக்கும் சொந்தமானவர் அல்ல. இன்னும் சொல்லப்போனால், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கும், தமிழ் நடிகர்களை ரசிக்கும் தமிழர்களுக்கும் சொந்தமானவர் என்று கூறினார்.
நடிகர் சிவாஜி எந்த கட்சிக்கும் சொந்தக்காரர் அல்ல. காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி, தமிழக முன்னேற்றக் முன்னணி என்ற கட்சியை துவக்கினார். அவருக்கு நினைவிடம் அமைக்க காலதாமதம் ஆனதால் மணி மண்டபம் கட்ட அரசு முடிவு செய்திருந்தது என்றார்.
எனவே சிவாஜியை ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடைக்க முற்பட வேண்டாம் என்று சட்டசபை உறுப்பினரை கேட்டுக் கொள்கிறேன் என்று விளக்கம் அளித்தார் முதல்வர் ஜெயலலிதா.
-
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு












Click it and Unblock the Notifications