திடீர் சின்னம்மா.. திஹார் தினகரன்.. என்னாது இது.. அடடா, தீபா டென்ஷனாயிட்டாரே!
இன்று துரோக கும்பலின் பிடியில் சிக்கி சீர்கெட்டு வரும் நிலை மிக மிக வேதனைக்குரியது என்று தீபா கூறியுள்ளார்.
சென்னை: திடீர் உப்புமா, சாம்பார் மாதிரி திடீர் சின்னம்மா மற்றும் திகார் தினகரன் மாதிரி ஆட்கள் அ.தி.மு.க.விற்கு சொந்தம் கொண்டாடுவது எள்ளளவும் ஏற்புடையது அல்ல என்று எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளர் தீபா கூறியுள்ளார். நான்தான் உண்மையான வாரிசு, என்னால்தான் அதிமுக கட்டிக்காக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தீபா கடும் கொந்தளிப்புடன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
புரட்சித்தலைவர், மற்றும் புரட்சித்தலைவியால் கட்டிக் காத்திட்ட அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இன்று துரோக கும்பலின் பிடியில் சிக்கி சீர்கெட்டு வரும் நிலை மிக மிக வேதனைக்குரியது.
துரோக கும்பலின் தலைவி சிறையிலிருந்தும் திருந்தாத வன்மம் கொண்ட சசிகலாவின் வழிகாட்டுதலில் துரோக வம்சத்தின் பினாமி வாரிசான திகார் சிறையிலிருந்து வெளி வந்து கொட்டம் அடிக்க துடிக்கும் டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க.வை நாங்களே இயக்குவோம் என்பது அடிமை கூடாரத்தின் மக்குச் சாமிகளாய் செயல்படும் எம்.எல்.ஏ.க்களில் சிலரை தன் வசமாக்கியதன் மூலம் கட்சியும், ஆட்சியும் எங்கள் வசமே என்று வெட்டி வீராப்பு பேசுவது பெரும் நகைச்சுவைக்குரியதும், கேளிக்குரியதுமாகும்.

திடீர் சின்னம்மா
திடீர் உப்புமா, சாம்பார் மாதிரி திடீர் சின்னம்மா மற்றும் திகார் தினகரன் மாதிரி ஆட்கள் அ.தி.மு.க.விற்கு சொந்தம் கொண்டாடுவது எள்ளளவும் ஏற்புடையது அல்ல.

தினகரன் யார்
யார் இந்த தினகரன்? கடைக்கோடித் தொண்டனுக்கும் பரிவுடன் வாழ்வளித்திட்ட புரட்சித் தலைவி அம்மாவால் அடையாளம் காட்டப்பட்டு நம்பிக்கைகுரியவராய் மாநிலங்களவை உறுப்பினர், கட்சியின் பொருளாளர் என்று தேர்வுச் செய்யப்பட்டவரே இந்த தினகரன்.

துரோகி பட்டியல்
கழகத்தை வழிநடத்திய புரட்சித்தலைவி அம்மா தினகரனை துரோகி என்று இனம் கண்டு பகிரங்கமாக கண்டித்து அடிப்படை உறுப்பினராகக் கூட இருக்க தகுதியற்ற நபராக நீக்கிவைத்தார். அன்று முதல் வெளித்தெரியா வாழ்வு கண்ட நபரே இந்த தினகரன்.
தொடர்ந்து முகத்திரை கிழிப்பின் வக்கற்ற தன்மைக்கான பழி வாங்கலாகவே உடனிருந்தே குழிப்பறிக்கும் சசிகலா மற்றும் தினகரன் உள்ளிட்ட துரோக கும்பலால் தான் புரட்சித்தலைவி அம்மாவுக்கு நேர்ந்த மரணத்தின் மர்மம் என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களால் முன் வைக்கப்படும் பகிரங்க குற்றச்சாட்டாகும்.

சதிகார கும்பல்
இந்த குற்றச்சாட்டுக்களுக்கு எல்லாம் தீர்வு வராத நிலையில் சதிகார கும்பல் கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற நினைப்பது பொது மக்களுக்கும், தொண்டர்களுக்கும் பொறுத்துக் கொள்ள முடியாத கோபத்தையும், ஆத்திரத்தையும் மூட்டியுள்ளது.

நாலாந்தர பேச்சாளர்கள்
இந்நிலையில் நாலாந்தரப் பேச்சாளர்களை கை கூலிகளாக வைத்துக்கொண்டு கூவத்தூரில் கொட்டம் அடித்த சில கோமாளிகளை குதிரை பேரம் பேசி ஆட்சி தனது கையில் என்று பல ஊழல் வழக்குகளிலிருந்து தப்பிப்பதற்காக திகார் தினகரன் டெல்லியை மிரட்டுகிறாரா? தொண்டர்களை ஏமாற்றுகிறாரா? என்பது அவருக்கே வெளிச்சம்.

திஹார் தினகரன்
அதிமுக என்பது எக்கு கோட்டை. வத்தலகுண்டு ஆறுமுகம், பூலாவாரி சுகுமாறன் சிந்திய ரத்தத்தால் உருவாக்கப்பட்ட இயக்கத்தை அதிமுகவுக்கு சம்பந்தமே இல்லாத சகுனி சசிகலா, திஹார் தினகரன் போன்றோர்களால் அதிமுகவை ஓருபோதும் வீழ்த்திட முடியாது.

உண்மையான வாரிசு
அம்மாவின் உண்மை வாரிசான என்னால் தான் இக்கழகம் கட்டிகாக்கப்படும். எனது அத்தை எனக்கு ஊட்டி வளர்த்திட்ட தைரியமும், தன்னம்பிக்கையும் கொண்டு இக்கழகத்தை மீட்டு கட்டி காப்பதே எனது லட்சியம்.
உண்மையான அதிமுக தொண்டர்களின் லட்சியமும் அதுவே. லட்சியம் நிறைவேறும். அந்நாளில் துரோக கும்பலின் கொட்டம், அடக்கப்பட்டிருக்கும், வீழ்த்தப்பட்டிருக்கும் என்பதனை எச்சரிக்கையுடன் தெரிவிக்கிறேன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications