புதிய ராணுவ தளபதி தல்பீர் சிங் நியமனத்தில் மாற்றமில்லை: மத்திய அரசு திட்டவட்டம்!
சென்னை: புதிய ராணுவ தலைமை தளபதியாக தல்பீர் சிங் சுஹாக் நியமனம் இறுதியானது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக உள்ள விக்ரம் சிங் ஜூலை மாதம் 31ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். ராணுவ விதிமுறைப்படி நடப்பு தளபதியின் ஓய்வு தேதிக்கு இரண்டு மாதத்துக்கு முன்பே புதிய தளபதியை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதையடுத்து, இந்திய ராணுவத்தின் அடுத்த தலைமை தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் தல்பீர் சிங் சுகாகை நியமிக்க முந்தைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால் ஆட்சி முடிவடையும் தருவாயில் மன்மோகன் அரசு அவசர அவசரமாக இந்த நியமனத்தை மேற்கொண்டது ஏன் என்ற சர்ச்சை எழுந்தது.
மேலும் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சாமி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், ''அடுத்த ராணுவ தளபதி நியமனத்தை ஒத்தி வைக்க வேண்டும். ஆட்சியைவிட்டு வெளியேற உள்ள அரசு அடுத்த ராணுவ தளபதியை நியமிக்க கூடாது. இது தொடர்பான முடிவை எடுக்கும் விவகாரத்தை அடுத்து ஆட்சிக்கு வரும் அரசிடம் விட வேண்டும்'' என கூறியிருந்தார்.
இதற்கிடையே, முன்னாள் ராணுவ தளபதியும், பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி துறைக்கான மத்திய இணை அமைச்சராகவும் ஆகியுள்ள வி.கே.சிங், புதிய ராணுவ தலைமை தளபதியாக தல்பீர் சிங் சுஹாக்கை நியமிக்க ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
தல்பீர் சிங் சுஹாக், ராணுவத்தில் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர். அவருக்கு பதவி உயர்வு வழங்க தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன் பின் 2012ஆம் ஆண்டு பிக்ரம் சிங் ராணுவத் தளபதியாக பொறுப்பேற்ற பின் இந்த தடை நீக்கப்பட்டது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று இப்பிரச்னையை எழுப்பிய காங்கிரஸ் கட்சி, புதிய ராணுவ தலைமை தளபதி நியமன விவகாரத்தில் மத்திய அரசின் நிலைக்கு மாறான கருத்தை தெரிவித்துள்ள வி.கே சிங்கை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் அல்லது அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியது.
இதனைத் தொடர்ந்தே இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக எழுந்து பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜெட்லி, புதிய ராணுவ தலைமை தளபதியாக தல்பீர் சிங் சுஹாக் நியமிக்கப்பட்டதில் அரசியல் கருத்துவேறுபாடுகளுக்கு இடமில்லை என்றும், அவரது நியமனம் இறுதியானது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications