புதிய ராணுவ தளபதி தல்பீர் சிங் நியமனத்தில் மாற்றமில்லை: மத்திய அரசு திட்டவட்டம்!
சென்னை: புதிய ராணுவ தலைமை தளபதியாக தல்பீர் சிங் சுஹாக் நியமனம் இறுதியானது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக உள்ள விக்ரம் சிங் ஜூலை மாதம் 31ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். ராணுவ விதிமுறைப்படி நடப்பு தளபதியின் ஓய்வு தேதிக்கு இரண்டு மாதத்துக்கு முன்பே புதிய தளபதியை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதையடுத்து, இந்திய ராணுவத்தின் அடுத்த தலைமை தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் தல்பீர் சிங் சுகாகை நியமிக்க முந்தைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால் ஆட்சி முடிவடையும் தருவாயில் மன்மோகன் அரசு அவசர அவசரமாக இந்த நியமனத்தை மேற்கொண்டது ஏன் என்ற சர்ச்சை எழுந்தது.
மேலும் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சாமி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், ''அடுத்த ராணுவ தளபதி நியமனத்தை ஒத்தி வைக்க வேண்டும். ஆட்சியைவிட்டு வெளியேற உள்ள அரசு அடுத்த ராணுவ தளபதியை நியமிக்க கூடாது. இது தொடர்பான முடிவை எடுக்கும் விவகாரத்தை அடுத்து ஆட்சிக்கு வரும் அரசிடம் விட வேண்டும்'' என கூறியிருந்தார்.
இதற்கிடையே, முன்னாள் ராணுவ தளபதியும், பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி துறைக்கான மத்திய இணை அமைச்சராகவும் ஆகியுள்ள வி.கே.சிங், புதிய ராணுவ தலைமை தளபதியாக தல்பீர் சிங் சுஹாக்கை நியமிக்க ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
தல்பீர் சிங் சுஹாக், ராணுவத்தில் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர். அவருக்கு பதவி உயர்வு வழங்க தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன் பின் 2012ஆம் ஆண்டு பிக்ரம் சிங் ராணுவத் தளபதியாக பொறுப்பேற்ற பின் இந்த தடை நீக்கப்பட்டது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று இப்பிரச்னையை எழுப்பிய காங்கிரஸ் கட்சி, புதிய ராணுவ தலைமை தளபதி நியமன விவகாரத்தில் மத்திய அரசின் நிலைக்கு மாறான கருத்தை தெரிவித்துள்ள வி.கே சிங்கை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் அல்லது அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியது.
இதனைத் தொடர்ந்தே இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக எழுந்து பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜெட்லி, புதிய ராணுவ தலைமை தளபதியாக தல்பீர் சிங் சுஹாக் நியமிக்கப்பட்டதில் அரசியல் கருத்துவேறுபாடுகளுக்கு இடமில்லை என்றும், அவரது நியமனம் இறுதியானது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications