47 நாடுகள் பங்கேற்கும் பிரம்மாண்ட ராணுவ கண்காட்சி... சென்னையில் இன்று தொடக்கம்!
பாதுகாப்புத் துறை ஏற்பாடு செய்துள்ள பிரம்மாண்ட ராணுவ கண்காட்சி சென்னை அருகே திருவடந்தையில் இன்று தொடங்குகிறது.
Recommended Video

சென்னை : பாதுகாப்புத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட ராணுவ கண்காட்சி சென்னை அருகே திருவிடந்தையில் இன்று துவங்குகிறது. இன்று தொடங்கி ஏப்ரல் 14ம் தேதி வரை நடைபெறும் கண்காட்சியில் பங்கேற்க நாளைய தினம் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வரவுள்ளார்.
பாதுகாப்புத் துறை சார்பில் சென்னை அருகே திருவிடந்தை ராணுவ கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 'டிப் எக்ஸ்போ - 18' என, பெயரிடப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியில் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா உள்பட, 47 நாடுகள் பங்கேற்கின்றன. இன்று தொடங்கி ஏப்ரல் 14 வரை ராணுவ கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார்.

நாட்டின் 10வது ராணுவ கண்காட்சியின் தொடக்க நாளான இன்று காலை 9:00 மணிக்கு வர்த்தக பார்வையாளர்களுக்காக திறக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து காலை, 10:00 மணி முதல் சர்வதேச பாதுகாப்பு துறையுடன், இந்தியா இணைவது உள்பட பல்வேறு கருத்தரங்குகள் மாலை வரை நடைபெற உள்ளன. இதனைத் தொடர்ந்து காலை 11:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரை ராணுவ வீரர்கள் மற்றும் விமானப்படை வீரர்களின் நேரடி சாகசங்கள் நடைபெறுகின்றன.
இரண்டாம் நாளான நாளை காலை, 11:30மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். பிரதமர் நாளை முறைப்படி, கண்காட்சியை துவக்கி வைக்கிறார். தொடர்ந்து இந்திய நிறுவனங்கள் சார்பில் அமைக்கப்பட்ட அரங்குகளையும் திறந்து வைத்து ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை வீரர்கள் நடத்தும் சாகச நிகழ்ச்சிகளையும் பிரதமர் பார்வையிடுகிறார்.
நாளை பிற்பகல் 2:30மணிக்கு, ராணுவ தொழில் பெருவழித்தடம் மற்றும் சிறு, குறு தொழில் கருத்தரங்கம், ராணுவ உற்பத்தி கொள்கைகள் மற்றும் மாநில ராணுவ தொழில் கொள்கைகள் குறித்த குழு விவாதம் நடைபெறுகிறது. 3ம் நாளான 13ம் தேதி காலை, 10:00 முதல் மதியம் 3:30 மணி வரை இந்தியா - ரஷ்யா ராணுவ தொழில் நிறுவனங்கள் பங்கேற்கும், கருத்தரங்கம் நடைபெறுகிறது. காலை, 11:30 முதல் மதியம் 12:00 மணி வரையும், மதியம் 3:30 முதல் 4:00 மணி வரையும் முப்படை வீரர்களின் சாகசங்கள் நடைபெறுகின்றன.
கண்காட்சியின் இறுதி நாள் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட உள்ளது. பார்வையாளர்களுக்கு இலவசமாக கண்காட்சியை பார்வையிடலாம். அடையாள அட்டைகளை கொண்டு செல்வது கட்டாயம். ராணுவ கண்காட்சியில் பிரம்மாண்ட பீரங்கிகள், டாங்கிகள் என்று ராணுவ வாகனங்கள் அணிவகுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதுவரை நடைபெற்ற கண்காட்சிகளிலேயே சென்னையில் நடைபெறும் ராணுவ கண்காட்சி மிகப்பெரியது. ராணுவ கண்காட்சியை முன்னிட்டு திருவிடந்தை பகுதி முழுவதும் ராணுவத்தினர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications