மழை அதிகமாக பெய்துல்லா, அதான் டெங்கு அதிகமாகிடுச்சி.. செல்லூர் ராஜூ 'அதிரடி' விளக்கம்

பருவமழை அதிகமாக பெய்வதாலேயே டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவுவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: பருவமழை அதிகமாக பெய்வதாலேயே டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவுவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை டெங்கு காய்ச்சல் பாடாய் படுத்தி வருகிறது. நாள்தோறும் அதிகரிக்கும் உயிரிழப்புகளால் மக்கள் மரண பீதியில் உள்ளனர்.

சாதாரணமாக காய்ச்சல் வந்தால் கூட டெங்கு காய்சசலோ என்ற பீதி மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. டெங்கு காய்ச்சலின் தாக்கத்தால் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளும் நிரம்பி வழிகின்றன.

டெங்குவுக்கு காரணம் மழை

டெங்குவுக்கு காரணம் மழை

இந்நிலையில் டெங்கு காய்ச்சலுக்கு மழைதான் காரணம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பருவ மழை அதிகமாக பெய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அதிக மழையால் டெங்கு

அதிக மழையால் டெங்கு

மழை அதிகமாக பெய்துள்ளதாலேயே டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் டெங்குவை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

சாணம் தெளித்தால்

சாணம் தெளித்தால்

தெர்மாகோள் திட்டத்திற்கு பிறகு அவரது ஒவ்வொரு கருத்தும் கிண்டலாகவே பார்க்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ வாசலில் சாணம் தெளித்தால் டெங்கு காய்ச்சல் வராது என கூறியிருந்தார்.

சோஷியல் மீடியாக்களில் பிரபலம்

சோஷியல் மீடியாக்களில் பிரபலம்

இந்நிலையில் பருவமழை அதிகம் பெய்ததாலே டெங்கு அதிகமாக பரவுகிறது என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். அமைச்சரின் இந்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் கிண்டலாக பேசப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+