லட்சத்தீவு அருகே காற்றழுத்த தாழ்வு நிலை- தமிழகம் முழுவதும் இன்று மழை பெய்யும்
சென்னை: லட்சத்தீவு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழ்நாட்டில் பெரும்பாலாந இடங்களில் மழை பெய்யும் என்றும் ஊட்டி, கோவை, வால்பாறை, தேனி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டை வடகிழக்கு பருவமழை புரட்டிப் போட்டு வருகிறது. கடந்த வாரம் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பெரும் கனமழை பெய்தது. இதனால் சென்னை, கடலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இந் நிலையில் சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில்,
வங்கக்கடலில் தெற்கு ஆந்திராவை ஓட்டி நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மறைந்து விட்டது. உள் மாவட்டங்களில் நிலவிய மேலடுக்கு சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. அதிக பட்சமாக திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் 14 செ.மீ. மழை பெய்துள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 13 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
இன்று(வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்யும். கோவை, ஊட்டி, வால்பாறை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழையை எதிர்பார்க்கலாம்.
தற்போது லட்சத்தீவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அரபிக்கடலில் உள்ளது. அரபிக்கடலில் இந்த நிகழ்வு இருந்த போதிலும் வங்கக்கடலில் உள்ள ஈரக்காற்றை தமிழகம் ஊடாக உள் வாங்கும். அதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்ய வேண்டிய மழை 44 செ.மீ. ஆனால் 39.3 செ.மீ. மழை இப்போதே பெய்துவிட்டது. இந்த ஆண்டு சராசரியாக பெய்யக்கூடிய மழையைவிட சற்று கூடுதலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றார்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெய்த மழை அளவு விவரம்:
சங்கரன்கோவில் 14 செ.மீ
ராஜபாளையம் 13 செ.மீ
ராதாபுரம், பாளையங்கோட்டை, ஆயிக்குடி தலா 10 செ.மீ
உத்தமபாளையம், கூடலூர் தலா 9 செ.மீ
குளச்சல், பேச்சிப்பாறை, சிவகிரி, தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர் தலா 6 செ.மீ
நாகர்கோவில், மைலாடி, பேரையூர், வத்திராயிருப்பு, பூதப்பாண்டி, வாடிப்பட்டி தலா 5 செ.மீ.
செங்கோட்டை, கன்னியாகுமரி, தக்கலை, வால்பாறை தலா 4 செ.மீ.
போடிநாயக்கனூர், சிவகாசி, சாத்தான்குளம், மரக்காணம், திருவள்ளூர் தலா 3 செ.மீ.
பூந்தமல்லி, கொடைக்கானல், பாபநாசம், குழித்துறை, வானூர், இரணியல், தூத்துக்குடி தலா 2 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
-
அடிச்சு பெய்யப்போகும் மழை.. பெரிய சம்பவம் இருக்கு! உஷாரா இருங்க மக்களே! -
மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications