எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் 10 பேருடன் ஆளுநரை சந்தித்தார் தினகரன்
கருணாஸ் உட்பட 3 எம்.எல்.ஏக்கள், 7 எம்.பி.க்களுடன் ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று தினகரன் சந்தித்தார்.
சென்னை: ஆளுநர் வித்யாசாகர் ராவை தமது ஆதரவு 3 எம்.எல்.ஏக்கள் மற்றும் 7 எம்.பி.க்களுடன் அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலர் தினகரன் இன்று சந்தித்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏக்கள் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்திருந்தனர். இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

ஆனால் இது அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை என கூறிவிட்டார் ஆளுநர். இது தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடமும் எதிர்க்கட்சிகள் மனு கொடுத்திருந்தன.
இந்நிலையில் தமது ஆதரவு 3 எம்.எல்.ஏக்கள் மற்றும் 7 எம்.பி.க்களுடன் ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று நண்பகல் 12.30 மணிக்கு தினகரன் சந்தித்தார். தினகரனுடன் எம்.எல்.ஏக்கள் கருணாஸ், கலைச்செல்வன், ரத்தினசபாபதி சென்றனர். அதேபோல் செங்குட்டுவன் உட்பட 7 எம்.பிக்களும் தினகரனுடன் சென்று ஆளுநரை சந்தித்தனர்.












Click it and Unblock the Notifications