மதுக் கடைகளைத் திறப்பதை எதிர்த்து தேமுதிக தீர்மானம்- மாநில மாநாடு நடத்தவும் முடிவு
சென்னை: தமிழகத்தில் மதுக் கடைகளைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக பொதுக்குழுவில் தீர்மானம் போடப்பட்டது. மொத்தம் 19 தீர்மானங்கள் போடப்பட்டன. விழுப்புரத்தில் மாநில மாநாடு நடத்தவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
சென்னை அருகே பொன்னேரியில் ஒரு கல்யாண மண்டபத்தில் தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டங்கள் இன்று பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்தது. இக்கூட்டத்தில் லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக முக்கியமாக ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டத்தின் இறுதியில் 19 தீர்மானங்களைப் போட்டு நிறைவேற்றினர். அதன்படி பிப்ரவரி 2ம் தேதி விழுப்புரத்தில் தேமுதிக மாநில மாநாட்டை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் மதுக் கடைகளைத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தீர்மானங்களில் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் கட்சியின் தலைமை நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், அணி செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க் கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.அனைவருடனும் கூட்டணி தொடர்பாக தலைவர் விஜயகாந்த் முக்கிய ஆலோசனை நடத்தினார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேமுதிக பொதுக்குழு - செயற்குழு தீர்மா்ன விவரங்கள்
- லோக்சாப தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க கட்சித் தலைவர் விஜயகாந்த்துக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. இதுதொடர்பாக முடிவெடுக்க ஒரு குழுவும் அமைக்கப்படுகிறது.
- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை தொடர்ந்து சீர்கெட்டு வருகிறது. இது கண்டனத்துக்குரியது.
- தமிழகத்தில் மின்வெட்டுப் பிரச்சினையைத் தீர்க்க உடனடி, விரைவு நடவடிக்கை தேவை.
- மறைமுகமாக உயர்த்தப்பட்ட பாலின் விலை உயர்வைக் குறைக்க வேண்டும்.
- கோமாரி நோயால் உயிரிழந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு தர வேண்டும்.
- விவசாயிகளுக்கு காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இழப்பீடு வழங்க வேண்டும்.
- இலங்கைப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும்.
- தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும்.
- சமையல் எரிவாயு விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்.
- பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தக் கூடாது.
- கொடநாட்டிலிருந்து ஜெயலலிதா நிர்வாகம் செய்வதால் மக்கள் வரிப்பணம் வீணாகிறது. இது கண்டனத்துக்குரியது.
- மருத்துவர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படாதது கண்டனத்துக்குரியது.
- அதிமுகவினரின் லஞ், ஊழல் நடவடிக்கைகளை முதல்வர் ஜெயலலிதா வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது கண்டனத்துக்குரியது.
-
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications