ஆள் வைத்து வழிப்பறி 'பிசினஸ்'.. தேமுதிக பிரமுகர் உள்பட 11 பேருக்கு கைக்காப்பு!
திருப்பூர்: ஆட்களை நியமித்து வழிப்பறிக் கொள்ளையை நடத்தி வந்த தேமுதிக பிரமுகர் உள்பட 11 பேரை திருப்பூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.
உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சமீப காலமாக தொடர்ந்து வழிப்பறிச் சம்பவங்கள் நடந்து வந்தன. இதுகுறித்து போலீஸுக்குப் புகார்கள் குவிந்தன. இதையடுத்து பல்வேறு தனிப்படைகளை அமைத்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் உடுமலை, தாராபுரம் சாலையில், போலீஸார் வாகனச் சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும்,தங்க நகைகள், முகமூடிகள் உள்ளிட்டவைகளும் காரில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, காரில் வந்த திருநெல்வேலியைச் சேர்ந்த சிவா(28), முருகேசன்(27), முருகன் (36), ரமேஷ்(29), அலெக்ஸ்(21), திருச்சியைச் சேர்ந்த பூபதி(36), சுரேஷ்குமார்(30) ஆகியோரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் நடந்த பல்வேறு கொள்ளை சம்பவங்களில் இவர்களுக்கு நேரடியான தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், உடுமலையை அடுத்துள்ள மலையாண்டிபட்டிணம் கிராமத்தில் இவர்கள் வீடு எடுத்து தங்கி குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இவர்களுக்கு உதவி செய்ததாக உடுமலை சரவணன், ரவிக்குமார், சுப்பிரமணியம்ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும், இவர்கள் அனைவருக்கும் மூளையாக இருந்து செயல்பட்டதாக தேமுதிக திருப்பூர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் கல்லு பாலன்(எ)பாலசுப்பிரமணியம் என்பவரையும் போலீஸார் கைது செய்தனர்.
கல்லு பாலன் பல தொழில்களை நடத்தி வருகிறார். சில ஆண்டுகலுக்கு முன்பே இவர், நாகரத்தினக் கல் மோசடி உள்பட பல வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டவர் ஆவார். இப்போது ஆள் வைத்து வழிப்பறியை பிசினஸ் போல நடத்திக் கைதாகியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications