For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காந்தியே நம்ப மாட்டாரு இந்தப் புகாரை... தேமுதிக எம்.எல்.ஏ சொல்வதைக் கேளுங்க!

Google Oneindia Tamil News

DMDK MLA says Tamilaruvi Manian threatened him
நாமக்கல்: காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன், தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆபாசமாக திட்டி மிரட்டினார் என்று தேமுதிகவைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

சமீபத்தில் விஜயகாந்த் குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார் தமிழருவி மணியன். இதையடுத்து அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட தேமுதிக எம்.எல்.ஏ பார்த்தசாரதி என்பவர், ஆபாசமாக பேசியதோடு கொலை செய்து விடுவேன், கை, கால்களை உடைத்து விடுவேன் என்று மிரட்டியதாக சர்ச்சை கிளம்பியது.

இதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் கூட கண்டனம் தெரிவித்திருந்தார். பார்த்தசாரதி கொலை மிரட்டல் விடுப்பதாக தமிழருவி மணியன் திருப்பூர் காவல்துறையில்அன்று இரவே புகார் செய்துள்ளார்.

இந்த நிலையில், தமிழருவி மணியன், செல்போனில் மிரட்டல் விடுப்பதோடு, ஆபாசமாக திட்டுவதாக பார்த்தசாரதி போலீஸில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

பார்த்தசாரதி நாமக்கல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், தமிழருவி மணியனிடம் செல்போனில் பேசிய போது, ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதுடன் மிரட்டல் விடுத்தார்.

அதன் பின் காந்திய மக்கள் கட்சியை சேர்ந்த சதீஸ் என்பவர் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டுகிறார். எனவே இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

English summary
DMDK MLA Parthasarathu has charged that GMM leader Tamilaruvi Manian threatened him on phone.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X