நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதியிலும் தேமுதிக தனித்து போட்டியிடும்.. விஜயகாந்த் அறிவிப்பு!

2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதியிலும் தேமுதிக தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதியிலும் தேமுதிக தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வியூகங்களை எதிர்க்கட்சிகள் இப்போதே தொடங்கி விட்டன.

DMDK will competite individually in 2019 Lok sabha election: Vijayakanth

நேற்று நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்திலும் நாடாளுமன்ற தேர்தல் குறித்தே விவாதிக்கப்பட்டது. பல்வேறு கட்சிகளும் 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலை குறி வைத்தே வேலையில் இறங்கியுள்ளன.

இந்நிலையில் 2019 மக்களவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தேமுதிக போட்டியிடும் என்று அறிக்கையில் விஜயகாந்த் அறிவித்துள்ளார். 2019 பாராளுமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்றும் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

அனைத்து தொகுதியிலும் போட்டியிட்டு தேமுதிக வெற்றிபெற்று மக்கள் பணி ஆற்றும். மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் பணியாற்ற அனைவரும் பாடுபடவேண்டும் என்றும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+