முதல்வர் அஞ்சலி செலுத்திய போது கூட விடாத திமுக தொண்டர்கள்.. மெரினாவில் இடம் கேட்டு கோஷம்
மறைந்த கருணாநிதியின் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி செலுத்தியபோது திமுக தொண்டர்கள் மெரினாவில் இடம் வேண்டும் என கேட்டு முழக்கமிட்டனர்.
Recommended Video

சென்னை: மறைந்த கருணாநிதியின் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி செலுத்தியபோது திமுக தொண்டர்கள் மெரினாவில் இடம் வேண்டும் என கேட்டு முழக்கமிட்டனர்.
தமிழக முதல்வர் இருக்கையை 5 முறை அலங்கரித்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைத்துறையினர் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சாபநாயகர் தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், காமராஜ், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்பி வேலுமணி, மக்களை துணை தலைவர் தம்பிதுரை உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
அப்போது ராஜாஜி ஹாலில் குவிந்திருந்த திமுக தொண்டர்கள் மெரினாவில் இடம் வேண்டும் என கோஷமிட்டனர். அஞ்சலி செலுத்திவிட்டு அவர்கள் வெளியேறும் வரை தொண்டர்கள் தொடர்ந்து கோஷமிட்டனர்.
சென்னை மெரினாவில் அண்ணா சமாதி கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி மறுத்துவிட்டது. இதுதொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை 8 மணிக்கு தீர்ப்பு வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications