For Quick Alerts
For Daily Alerts
Just In
வாக்குப்பதிவு தொடங்கியதும் முதல் ஆளாக ஓட்டு போட்ட திமுக வேட்பாளர் மருதுகணேஷ்
சென்னை: ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் காலையிலேயே வாக்களித்தார்.
ஆர்.கே.நகரில் வாக்குப்பதிவு தொடங்கியதும் மருதுகணேஷ் வாக்களித்தார். இதன் பிறகு புகைப்பட கலைஞர்களுக்கு தனது மை வைக்கப்பட்ட விரலை காட்டினார். பின்னர் நிருபர்களிடம் மருதுகணேஷ் கூறியதாவது:
ஆர்கே நகர் தேர்தல் முறையாக நடைபெறும் என நம்புகிறோம். அதேநேரம் தேர்தல் ஆணையம் திருப்திகரமாக இல்லை என்பது குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கையளித்திருந்தார். அந்த அறிக்கையே எனது வாக்குமூலம்.
இதே தொகுதியில் தொண்டனாக இருந்த நான் இப்போது வேட்பாளராக்கப்பட்டுள்ளேன். ஆர்.கே.நகர் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. அந்த புறக்கணிப்பை போக்க ஸ்டாலினுக்கு ஆதரவு அளித்து என்னை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கையுள்ளது.
#RKNagarByPoll DMK candidate N. Marudhu Ganesh cast his vote at polling booth no. 134 in #Chennai, says "whether it is Rs 6000 or Rs 60,000, we are going to win; voters of RK Nagar will teach a lesson to AIADMK this time" pic.twitter.com/g58dCEZ4xc
— ANI (@ANI) December 21, 2017
Comments
rk nagar rk nagar by poll 2017 by election by poll voting today ஆர்கே நகர் ஆர்கே நகர் இடைத் தேர்தல் 2017 வாக்குப் பதிவு
English summary
DMK candidate Maruthu Ganesh caste his vote in RK Nagar.