தொண்டர்களை கட்டிப்போட்ட 15 நிமிடம்.. ஸ்டாலின் வாழ்க்கையில் மிக முக்கியமான பேச்சு
திமுக செயல்தலைவர் ஸ்டாலின், திமுக செயற்குழு கூட்டத்தில் பேசிய பேச்சு அவரது வாழ்க்கையில் மிக முக்கியமான பேச்சு ஆகும்.
சென்னை: திமுக செயல்தலைவர் ஸ்டாலின், திமுக செயற்குழு கூட்டத்தில் பேசிய பேச்சு அவரது வாழ்க்கையில் மிக முக்கியமான பேச்சு ஆகும்.
ஸ்டாலின், திமுக செயற்குழு கூட்டத்தில் , திமுக தலைவர் கருணாநிதி மறைவு குறித்தும், மெரினா பிரச்சனை குறித்தும் மிகவும் உருக்கமாக பேசி உள்ளார். திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் முதல் முறையாக திமுக செயற்குழு கூட்டம் நடந்துள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த கூட்டம் நடந்துள்ளது. ஸ்டாலின் பேச்சை கேட்டு திமுக உறுப்பினர்கள் கண்ணீர் விட்டனர் .
அரசுக்கு எதிர்
திமுக செயற்குழு கூட்டமாக இருந்தாலும் ஸ்டாலின் இதில் தமிழக அரசு குறித்த கண்டனத்தை பதிவு செய்தார். கருணாநிதியின் மறைவின் போது, அரசு எப்படி எல்லாம் அலைக்கழித்தது, திமுக அதை எதிர்த்து எப்படி எல்லாம் போராடியது என்று கூறினார். முக்கியமாக மெரினாவில் என் உடல் புதைக்கப்பட்டு இருக்கும் என்று கூறி,
அந்த பிரச்சனை எவ்வளவு வீரியமாக இருந்தது என்று நிரூபித்தார்.
ஒருங்கிணைத்தார்
அதோடு, கருணாநிதியின் சிறப்பை கூறிவிட்டு, ''அவருக்காக முதல்வரின் கையை பிடித்தேன், தலைவருக்காக என் மானம் போனால் கூட பரவாயில்லை'' என்று ஸ்டாலின் கூறினார். இது திமுக தொண்டர்கள் எல்லோரையும் அவர் பக்கம் மொத்தமாக இழுத்து இருப்பதாக திமுக தரப்பில் கூறுகிறார்கள். அந்த ஒரு பேச்சில் ஸ்டாலின் நின்றுவிட்டார், என்று திமுக உறுப்பினர்கள் தெரிவிக்கிறார்கள்.
பாசம்
மிக முக்கியமாக ஒரு மகனாகவும் குடும்பத்தில் ஸ்டாலின், பெயர் எடுத்துவிட்டார். என் அப்பாவை இழந்துவிட்டேன், அப்பாவிற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று கூறியதன் மூலம், குடும்பத்தில் தன்னை ஒரு பொறுப்பான மகனாக காட்டியுள்ளார். மெரினா விவகாரத்தில் வென்று அதை நிரூபித்தும் காட்டியுள்ளார்.
வாழ்க்கையில் மிக முக்கியமான பேச்சு
அதேபோல் அவர் இதில் அழகிரி பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அழகிரி குறித்து தனக்கு எந்த அச்சமும் இல்லை என்றும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். இது ஸ்டாலினின் வரலாற்றில் மிக முக்கியமான பேச்சாகும். முதல் முறை திமுக தலைவர் கருணாநிதி இல்லாமல் நடந்த செயற்குழு கூட்டத்தில் ஸ்டாலின் பேசியுள்ளார். அந்த ஒரு பேச்சிலேயே அவர் மொத்த தொண்டர்களையும் தன் பக்கம் இழுத்துள்ளார்.