மாம்பழங்களால் புற்றுநோயா? ரசாயன கல் வைத்து பழுக்க வைத்ததை ஈஸியாக கண்டுபிடிக்க சூப்பர் டிப்ஸ்
சென்னை: மாம்பழ சீசன்கள் ஆரம்பித்து விட்டன. அந்த மாம்பழங்களை எப்படி பார்த்து வாங்குவது, ரசாயன கல் வைத்து பழுக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டுபிடிக்க சில டிப்ஸ்களை பார்க்கலாம்.
முக்கனிகளில் மா, பலா, வாழை என்பார்கள். இவற்றில் மாம்பழம் கோடை காலத்தில் சீசன் இருக்கும். இதனால் மக்கள் அந்த பழங்களை விரும்பி வாங்குவர். மாம்பழங்களில் அல்போன்ஸா, மல்கோவா, செந்தூரா, நீலம் உள்ளிட்ட வகைகள் உள்ளன.
இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. பொதுவாக மாம்பழங்கள் தானாக பழுக்க வேண்டும். சிலர் அதை அரிசி டிரம்பில் போட்டு வைப்பர், சிலர் வைக்கோல் போட்டு அதில் மாம்பழங்களை வைத்து பழுக்க வைப்பர்.

அதிக லாபம்: இதுதான் இயற்கையானது. இதனால் எத்தனை மாம்பழங்களை சாப்பிட்டாலும் உடலுக்கு ஒன்றுமே ஆகாது. இந்த நிலையில் மாம்பழங்களை மக்கள் வாங்கி அதிக லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மக்களின் உயிர்களுடனே சில வியாபாரிகள் விளையாட தொடங்கிவிட்டார்கள். மாம்பழங்கள் செங்காயாக இருக்கும் போதே அதை பழுக்கவைக்க ரசாயன கார்பைட் கல்லை வைத்துவிடுகிறார்கள்.
உடல் உபாதைகள்: இதனால் உடலுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன. தீராத வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்டவை ஏற்படுகின்றன. இதனால் சிலருக்கு புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே கல் வைக்காத மாம்பழங்களை எப்படி வாங்குவது என்பது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியை பார்ப்போம். அவர் கூறுகையில் மாம்பழம் சீசன் வந்துவிட்டது. எந்தெந்த கடைகளில் மாம்பழங்கள் விற்கிறார்கள் என்ற முழு பட்டியல் எங்களிடம் உள்ளது.
கெமிக்கல் ஸ்பிரே: இந்த கடைகளுக்கு நாங்கள் குழுக்களாக சென்று இயற்கை மாறாக பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை பறிமுதல் செய்து அழித்து வருகிறோம். மாம்பழங்களில் கெமிக்கல் ஸ்பிரே செய்து கெமிக்கல் பாக்கெட்டுகளை போட்டு வைத்தும் பழுக்க வைக்கிறார்கள். எனவே சீசன் தொடங்கும்போதே நாங்கள் கண்காணிப்பை அதிகரித்துள்ளோம். மாம்பழங்களை எப்படி வாங்குவது என பொதுமக்கள் எங்களிடம் கேள்வி கேட்கிறார்கள்.
பார்த்தவுடன் கண்டறியலாம்: பழக்கடைகளிலோ அல்லது சூப்பர் மார்க்கெட்டுகளிலோ சென்றவுடன் மாம்பழங்களை பார்த்தவுடன் நாம் இயற்கையாக பழுக்க வைத்ததா இல்லை செயற்கையாகவா என்பது தெரிந்து கொள்ள வேண்டும். மாம்பழங்களை அழகாக அடுக்கி வைத்திருப்பார்கள். அவற்றை பார்த்தால் எல்லாமே ஒரே மாதிரி இருக்கும். அது எப்படி பழுக்கும் என நம் மனதிற்குள் சந்தேகம் ஏற்பட வேண்டும்.
மஞ்சளா இருக்கும்: அந்த பழம் பார்ப்பதற்கு மஞ்சளா சாப்பிடுவதற்கு ஆசையாக இருக்கும். ஆனால் முகர்ந்து பார்த்தால் வாசனை ஏதும் வராது. ஒரு அறையில் ஒரு மாம்பழம் வைத்தாலே அதிக வாசனை வரும், ஆனால் அத்தனை மாம்பழங்கள் இருக்கும் நிலையில் ஒரு வாசனை கூட வராமல் இருக்கும். இது தெரியாமல் நாம் வீட்டிற்கு மாம்பழங்களை வாங்கி வந்துவிட்டோம். இதில் கல் வைத்திருக்கிறார்களா இல்லையா என்பதை எப்படி கண்டுபிடிக்கிறது என பார்க்கலாம்.

தண்ணீரில் மூழ்கும்: ஒரு பக்கெட் தண்ணீரில் போடுங்கள். இயற்கையாக பழுத்திருந்தால் அந்த பழங்கள் நீருக்கு அடியில் செல்லும். செயற்கையாக கல் வைத்து பழுத்திருந்தால் அவை மேலே மிதக்கும். அந்த பழத்தை கட் செய்யும் போது காயை கட் செய்வதுபோல் இருக்குமே தவிர பழத்தை கட் செய்வது போல் இருக்காது. மேலே மட்டுமே பழுக்கும் மாம்பழங்களில் உள்ளே புளிப்பு அப்படியே இருக்கும். கட் செய்யும் போது கரகரவென இருக்கும்.
5 நிலைகளில் பழுக்கும்: மாம்பழத்தின் பக்கத்தில் வெள்ளையாக இருந்தாலே அந்த பழம் செயற்கையாக பழுக்க வைத்தது என கண்டறியலாம். மாம்பழங்கள் இயற்கையாக 5 நிலைகளில் பழுக்கும். முதலில் காயாக இருக்கும். பிறகு அதன மூக்கு பகுதி பழுக்கும். மூக்கு பகுதி முதல் காம்பு பகுதி வரை கொஞ்சம் கொஞ்சமாக பழுக்கும். பழுக்கும் போது இயற்கையான பழத்தில் ஆங்காங்கே சிவப்பு நிறம், மஞ்சள் நிறம் கலந்து இருக்கும். மாம்பழத்தை சாப்பிடும்போது அதில் ஒரிஜினலான மாம்பழத்தின் டேஸ்ட் இருக்காது. புளிப்பு தன்மைதான் இருக்கும். அதை வைத்தும் கண்டுபிடிக்கலாம். இவ்வாறு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தெரிவித்தார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications