விரைவில் ”குறும்படம்” ரிலீஸ்? எண்ணூர் சென்ற கமல் சட்டைபையில் இருந்த அந்த பொருளை கவனித்தீர்களா?
Recommended Video
சென்னை: எண்ணூர் துறைமுகத்தில், கமல்ஹாசன் இன்று நேரடியாக ஆய்வுகளை செய்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கமல் அரசியலுக்கு அடித்தளம் போட்டுவிட்டார் என்பது பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால், அவர் குறும்படம் எடுக்கத்தான் எண்ணூர் சென்றாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கமல் தனது ரசிகர்களுக்கே தெரியாமல் செல்ல வேண்டும் என்பதற்காக விடிந்தும், விடியாமல் எண்ணூர் துறைமுகம் பகுதிக்கு போயுள்ளார்.
வேறு நோக்கம்
கமல் விசிட் அடித்தது அரசியல் நோக்கம் என்று பொதுவான கருத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர் தீர்வை நோக்கி பயணிப்பதாகவே தெரிகிறது. தனது அரசியல் லாபத்திற்காக அங்கு சென்றதாக தெரியவில்லை.
மைக் மாட்டிய சட்டை
இந்த கருத்து எழ காரணம் கமல் தனது சட்டைப்பையில் மாட்டியிருந்த Label mike. முதல்வன் படத்தில் வடிவேலு ஒரு பெண்ணின் சட்டைப்பையில் மாட்டிவிடுவாரே அன்றுமுதல் தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் ஃபேமஸ் ஆனதே அதே மைக்தான்.
ஒலியை பதிவு செய்யும்
சின்னத்திரையில் நிகழ்ச்சி நடத்துவோர், பேட்டி கொடுப்போர் எல்லோருமே தங்களது சட்டைப்பையில் இந்த மைக்கை மாட்டி வைத்திருப்பார்கள். இது ஒலியை உள்வாங்கி அதை பதிவு செய்யும். எனவேதான், நேயர்கள் தெளிவான குரலை கேட்க முடியும்.
பிக்பாஸ் நிகழ்ச்சி
இதுபோன்ற ஒரு மைக்கைத்தான், கமல் சட்டைப்பையிலும் பொருத்தியிருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தும்போது அவரது சட்டைப்பையிலும் இதுபோன்ற மைக் கமல் பொருத்தியிருப்பார். எண்ணூர் துறைமுகத்திற்கு சென்ற கமல் இந்த மைக்கை பொருத்தியது ஏன்? நடப்பவற்றை பதிவு செய்து அதை குறும்படமாக வெளியிடப்போகிறார் என்ற எண்ணத்தை இது ஏற்படுத்தியுள்ளது.
ஆவணப்படமா?
மாற்றி, மாற்றி பேசுவோர்களை, இதோ ஒரு 'குறும்படம்' என்று போட்டு காண்பித்து சிக்கலில் மாட்டி வைப்பார் கமல். இதே பிக்பாஸ் யுக்தியை அரசியல்வாதிகளுக்கும் கமல் காட்டப்போவதன் அறிகுறிதான் இந்த ஆவணப்படமோ என்ற சந்தேகம் எழுகிறது.