கருணாநிதியுடன் டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் தந்தை திடீர் சந்திப்பு- சிபிஐ விசாரிக்க கோரி மனு
சென்னை: தற்கொலை செய்து கொண்ட டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி திமுக தலைவர் கருணாநிதியை இன்று நேரில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது மகள் தற்கொலையில் நீடிக்கும் மர்மத்தை வெளியே கொண்டுவர வேண்டும்; இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வலியுறுத்த வேண்டும் என வலியுறுத்தி கருணாநிதியிடம் மனு கொடுக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கை திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி டிஎஸ்பி விஷ்ணுபிரியா திருச்செங்கோட்டில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த சம்பவம். இதனைத் தொடர்ந்து டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு மற்றும் கோகுல்ராஜ் கொலை வழக்கு ஆகிய இரு வழக்குகளையும் சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.
சிபிசிஐடி போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர். ஆனால் 5 மாதங்கள் ஆகியும் இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மேலும் சிபிசிஐடி விசாரணையில் விஷ்ணுபிரியாவின் தந்தைக்கு எந்தவித திருப்தியும் இல்லை.

இந்த நிலையில் மகள் தற்கொலையில் நிலவும் மர்மத்தை வெளிக்கொண்டு வரவும், தனது மகள் வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக்கோரியும் டிஎஸ்பி விஷ்ணுபிரியாயின் தந்தை ரவி இன்று திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
இச்சந்திப்பின் போது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உடன் இருந்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications