கருணாநிதியுடன் டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் தந்தை திடீர் சந்திப்பு- சிபிஐ விசாரிக்க கோரி மனு
சென்னை: தற்கொலை செய்து கொண்ட டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி திமுக தலைவர் கருணாநிதியை இன்று நேரில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது மகள் தற்கொலையில் நீடிக்கும் மர்மத்தை வெளியே கொண்டுவர வேண்டும்; இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வலியுறுத்த வேண்டும் என வலியுறுத்தி கருணாநிதியிடம் மனு கொடுக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கை திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி டிஎஸ்பி விஷ்ணுபிரியா திருச்செங்கோட்டில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த சம்பவம். இதனைத் தொடர்ந்து டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு மற்றும் கோகுல்ராஜ் கொலை வழக்கு ஆகிய இரு வழக்குகளையும் சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.
சிபிசிஐடி போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர். ஆனால் 5 மாதங்கள் ஆகியும் இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மேலும் சிபிசிஐடி விசாரணையில் விஷ்ணுபிரியாவின் தந்தைக்கு எந்தவித திருப்தியும் இல்லை.

இந்த நிலையில் மகள் தற்கொலையில் நிலவும் மர்மத்தை வெளிக்கொண்டு வரவும், தனது மகள் வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக்கோரியும் டிஎஸ்பி விஷ்ணுபிரியாயின் தந்தை ரவி இன்று திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
இச்சந்திப்பின் போது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உடன் இருந்தார்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications