தாம்பரத்திலிருந்து நுங்கம்பாக்கம் செல்ல ஒன்றரை மணி நேரம்... அட மின்சார ரயில்களிலும் ஜாம்!
சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கத்தால் மின்சார ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தீபாவளிப் பண்டிகைக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதால் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பல மணி நேரம் தாமதமானதால் அலுவலகம் செல்வோர் அவதியடைந்தனர்.
தீபாவளிப் பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக நேற்றும், இன்றும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு, இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் நெடுந்தூரம் செல்லும் மக்கள் ரயில்களில் ஏறி புறப்பட்டு வருகின்றனர்.
அரசுப் பேருந்து ஆம்னி பேருந்துகளில் செல்வோர் நேற்று முதல் சொந்த ஊர் செல்ல புறப்பட்டதால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் சிறப்பு ரயில்கள் இயக்கத்தால் சென்னையில் மின்சார ரயில்கள் சேவை முடங்கியது.
சிக்னல் கிடைக்காததால் சென்னை புறநகர்ப் பகுதிகளில் இயக்கப்பட்ட ரயில்கள் ஆங்காங்கே நின்று சென்றன. இதனால் தாம்பரத்தில் இருந்து நுங்கம்பாக்கம் வந்து சேரவே சுமார் ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. ரயில்கள் தாமதமாக வந்ததால் அலுவலகம் செல்வேர்ர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.