என்னாது ஒ.பிஎஸ் குடிநீருக்கு போராடுறாரா?...நல்ல கேலிக்கூத்து - துரைமுருகன் சீண்டல்!
தமிழக அரசை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது கேலியான விஷயம் என்று திமுக முதன்மைச் செயலாளரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன் கூறியுள்ளார்.
சென்னை : அதிமுக அரசில் நேற்று வரை இருந்து விட்டு இன்று குடிநீர் பிரச்னைக்காக ஓ.பன்னீர்செல்வம் போராடுவது கேலியாக இருக்கிறது என்று திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக அரசை கண்டித்து ஆகஸ்ட் 10ம் தேதி சென்னையில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் போராட்டம் நடைபெறும் என்று அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடிக்கு எதிராக குரல் கொடுத்து வந்த ஓ.பிஎஸ் முதன்முறையாக அரசை எதிர்த்து போராட்டத்தை அறிவித்துள்ளார். அனுமதி கொடுக்காவிட்டாலும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார் ஓபிஎஸ்.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் போராட்டம் குறித்து துரைமுருகன் கருத்து கூறுகையில்: ஓ.பன்னீர்செல்வம் குடிநீருக்காக போராட்டம் நடத்துவது கேலியாக இருக்கிறது, அதிமுக அரசில் நேற்று வரை இருந்து விட்டு இன்று போராடுவதா? குடிநீர் பிரச்னையை தீர்க்க எப்போதாவது நடவடிக்கை எடுத்துள்ளாரா ஓ.பிஎஸ்.
கிடப்பில் போடப்பட்ட கிருஷ்ணா நதிநீர்த்திட்டம் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது, சென்னை நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும திட்டம் திமுக ஆட்சியில் துவங்கி பணி முடிந்தது.அதிமுக ஆட்சியில் சென்னை குடிநீர் பிரச்னையைத் தீர்க்கத் திட்டம் நிறைவேற்றியது உண்டா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications