நீட் தேர்வில் குதிரை பேர ஆட்சி இரட்டை வேடம் போடுகிறது- ஸ்டாலின் குற்றச்சாட்டு
நீட் தேர்வு விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான குதிரைபேர ஆட்சி இரட்டை வேடம் போடுகிறது என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை: நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களை ஏமாற்றும் கபடநாடகத்தை எடப்பாடி பழனிச்சாமி அரசு நடத்துகிறது- என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரி சேலத்தில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டது.

திமுக சார்பில் தூர்வாரப்பட்ட எடப்பாடி அருகே உள்ள கச்சராயன் குளத்தை பார்வையிடவும் முடிவு செய்து இருந்தார். இதை தொடர்ந்து சேலம் செல்வதற்காக கோவைக்கு விமானம் மூலம் இன்று காலை மு.க.ஸ்டாலின் வந்தார். ஆனால் சேலம் செல்வதற்கு ஸ்டாலினுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
எனினும் கோவை வந்த ஸ்டாலினை வரவேற்க ஏராளமான தொண்டர்கள் திரண்டு இருந்தனர். அவர்கள் வரவேற்பை ஏற்றுக்கொண்டு அவர் கார் மூலம் சேலத்துக்கு புறப்பட்டார். கோவை கருமத்தம்பட்டி கனியூர் டோல்கேட் அருகே மு.க.ஸ்டாலின் வந்த போது போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது மு.க ஸ்டாலினிடம் மனிதசங்கிலி போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று கூறி ஒரு கடிதம் கொடுத்தனர். இதனையடுத்து தடையை மீறி சேலம் செல்ல முயன்ற ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஸ்டாலின் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான குதிரை பேர ஆட்சி இரட்டை வேடம் போடுகிறது என்றார்.
நீட் தேர்வு விலக்கு மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது என்றும் அந்த மசோதா குடியரசுத்தலைவருக்கே போய் சேரவில்லை என்றும் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். அதிமுக ஆட்சியாளர்கள் நீட் விவகாரத்தில் பொய் செல்லி கொண்டு இருக்கின்றனர் என்று அவர் கூறினார்.
தாம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சேலம், கோவை, ஈரோட்டில் மனிதச்சங்கிலி போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறிய ஸ்டாலின், நீட் தேர்வுக்கு விதிவிலக்கு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று கூறினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications