சசிகலாவின் சீராய்வு மனுவுக்கு ஐடியா கொடுத்ததே 'எடப்பாடி'தானாம்... பரபர தகவல்கள்
சசிகலா சீராய்வு மனு தாக்கல் செய்ய முடியும் என்ற தகவலை தெரிவித்ததே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் என கூறப்படுகிறது.
சென்னை: சசிகலா திடீரென சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ததன் பின்னணியில் இருப்பதே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
பெங்களூரு சிறைக்கு போய் 3 மாதங்களாகிவிட்ட நிலையில் திடீரென உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார் சசிகலா .1991-ம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒன்றை முன்வைத்து இந்த சீராய்வு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்.

சசி சீராய்வு மனு
முதல்வர் குற்றவாளி ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில் அவருக்கே தண்டனை இல்லை என்கிற போது எங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்கிறது சசிகலாவின் சீராய்வு மனு. இந்த சீராய்வு மனு தாக்கல் பின்னணியில் இருப்பதே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் என கூறப்படுகிறது.

அட்வகேட் ஜெனரல் ஐடியா
அண்மையில் அட்வகேட் ஜெனரல் முத்துக்குமாரசாமி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துள்ளார். இச்சந்திப்பு என்பதே அங்கீகாரமில்லாத வீட்டு மனைப் பிரிவு தொடர்பான வழக்குக்குதான். அப்போதுதான் சசிகலா நினைத்தால் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்யலாம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் முத்துக்குமாரசாமி விவரித்துள்ளார்.

எடப்பாடி பொறுப்பேற்பு
இத்தகவல் வழக்கறிஞர் ஒருவர் மூலமாக சசிகலாவுக்கு சொல்லி அனுப்பியுள்ளார் எடப்பாடியார். இது தொடர்பாக பெங்களூரு வழக்கறிஞர்களுடனும் சசிகலா ஆலோசனை நடத்தி பின்னர்தான் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டதாம். இந்த சீராய்வு மனு தாக்கல் செய்வதற்கான செலவு முதல் அனைத்து ஏற்பாடுகளையும் தாமே ஏற்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

ஓபிஎஸ் கோஷ்டி ஆத்திரம்
இப்படித்தான் உச்சநீதிமன்றத்தில் அதிரடியாக சசிகலாவின் சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டதாம். ஏற்கனவே சசிகலா, தினகரனை நீக்காத கோபத்தில் இருக்கும் ஓபிஎஸ் கோஷ்டி இத்தகவலை கேட்டு கடும் ஆத்திரத்தில் இருக்கிறதாம்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications