கருணாஸ் மீதான கொலை முயற்சி பிரிவை ரத்து செய்து உத்தரவு
Recommended Video

சென்னை: கருணாஸ் மீதான கொலை முயற்சி பிரிவை ரத்து செய்து எழும்பூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திநகர் போலீஸ் துணை ஆணையர் அரவிந்தனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசினார். மேலும் வன்முறையை தூண்டும் அளவுக்கு அவரது பேச்சு இருந்தது.

இதையடுத்து அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு கருணாஸை கைது செய்ய ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று அதிகாலை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வைத்து நுங்கம்பாக்கம் போலீஸார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து அவர் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் முன்பு ஆஜர்படுத்தார்.
அப்போது அவரை வரும் அக்டோபர் 5-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும் அவர் மீதான கொலை முயற்சி வழக்கு (307) ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இன்று நீதிமன்றத்துக்கு விடுப்பு என்பதால் நாளை ஜாமீன் மனுவை தாக்கல் செய்ய கருணாஸ் தரப்பு முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications