தமிழகம் உள்பட நாடு முழுவதும் நாளை ரம்ஜான்.. அன்று சுப்ரீம் கோர்ட்டுக்கும் விடுமுறை
சென்னை: ஈகைத் திருநாள் எனப்படும் ரமலான் பண்டிகை இந்தியாவில் கொண்டாடப்படுவது முன்னிட்டு வரும் 7ம் தேதி உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமையன்று ரமலான் கொண்டாடப்பட உள்ளதாக மத்திய அறிவித்திருந்தது. எனவே இன்று வழக்கம்போல் உச்சநீதிமன்றம் செயல்படும் என்று உச்சநீதிமன்ற பதிவாளர் ராஜேஷ்குமார் கோயல் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு இன்று வேலை (6.07.2016) நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை வியாழக்கிழமையன்று ரமலான் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ரமலான் நோன்பு முடிந்ததன் நிறைவாக இஸ்லாமிய நாடுகளில் கொண்டாடப்படும் ஈதுல் பித்ர் எனப்படும் ரம்ஜான் பண்டிகை ஆண்டுதோறும் ஷவ்வால் முதல்பிறை தினத்தன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், இந்த ஆண்டின் ரமலான் நோன்பு நேற்றுடன் நிறைவடைவதால் திங்கட்கிழமை ஷவ்வால் மாதத்தின் முதல்பிறை மத்திய கிழக்கு நாடுகளில் தென்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அன்றைய தினம் பிறை தோன்றவில்லை.
இதையடுத்து, சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட ஐக்கிய அமீரக நாடுகளில் இன்று (புதன்கிழமை) ஈதுல் பித்ர் எனப்படும் ரமலான் திருநாள் கொண்டாடப்படும் என மேற்கண்ட நாடுகளின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஏமன், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் இன்று (புதன்கிழமை) ரமலான் பண்டிகை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புவியியல் அமைப்புக்கு ஏற்ப ஒவ்வொரு நாட்டிலும் முதல்பிறை தோன்றுவதற்கேற்ப அந்நாடுகளில் ரமலான் கொண்டாடப்படும். வழக்கமாக, சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட ஐக்கிய அமீரக நாடுகளில் ரமலான் கொண்டாடிய மறுநாள்தான் இந்தியாவில் ரமலான் கொண்டாடப்படும்.
அவ்வகையில், இந்தியாவில் வரும் 7ம் தேதி (வியாழக்கிழமை) இங்கு ரமலான் கொண்டாடப்படும், எனினும், தமிழ்நாடு மற்றும் இதர மாநிலங்களை பொருத்த வரையில் அந்தந்த மாநில அரசுகளின் 'தலைமை காஜி'யின் அறிவிப்புக்கு இணங்க, அவர் குறிப்பிடும் நாளில் தான் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனிடையே ரமலான் பண்டிகையை ஒட்டி வரும் 7ம் தேதி உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, வியாழக்கிழமையன்று ரமலான் கொண்டாடப்பட உள்ளதாக மத்திய அறிவித்திருந்தது. எனவே இன்று வழக்கம்போல் உச்சநீதிமன்றம் செயல்படும் என்று உச்சநீதிமன்ற பதிவாளர் ராஜேஷ்குமார் கோயல் தகவல் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications