எந்த பட்டனை அழுத்தினாலும் இரட்டை இலைக்கு ஓட்டு– நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு
நெல்லை: நெல்லை மாவட்டம் களக்காடு பகுதிகளில் உள்ள வாக்கு சாவடிகளில் காலை 7 மணிக்கே ஓட்டு போட வாக்காளர்கள் குவிந்தனர்.
இயந்திரத்தை பொருத்துவதில் காலதாமதம் ஏற்பட்டதால் அங்கு 15 நிமிடம் தாமதமாக ஓட்டு பதிவு தொடங்கியது.
இந்நிலையில் பத்மநேரி அரசு பள்ளி வாக்கு சாவடியில் மின்னனு இயந்திர கோளாறு ஏற்பட்டதால் காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கவில்லை. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து கோளாறை சரி செய்தனர்.

இதையடுத்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு வாக்கு பதிவு நடந்தது. இதே போல் களக்காடு அருகே இடையன்குளம் டிடிடிஏ துவக்கப்பள்ளி வாக்கு சாவடியில் ஆரம்பம் முதலே வாக்கு பதிவு இயந்திரத்தில் குளறுபடி ஏற்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
மேலும் எந்த பட்டனை அழுத்தினாலும் இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு பதிவாகிறது என திமுகவினர் புகார் தெரிவித்தனர். அங்குள்ள மொத்தம் 1063 ஓட்டுகளில் 476 ஓட்டுகள் பதிவான நிலையில் மதியம் 2 மணிக்கு ஓட்டு பதிவு நிறுத்தப்பட்டது. பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
களக்காடு இன்ஸ்பெக்டர் லட்சுமணன் தலைமையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இநத தகவலை கேட்டு அங்கு அதிமுகவினரும் குவிந்தனர். இதற்கிடையே நாங்குநேரி தாசில்தார் கல்யாண்குமார் தலைமையில் அதிகாரிகள் மாற்று இயந்திரம் கொண்டு வந்து பொருத்தினர். இதை தொடர்ந்து அங்கு 5.30 மணிக்கு மீண்டும் வாக்கு பதிவு தொடங்கியது.
ஆனால் அரை மணி நேரமே வாக்கு பதிவு நடந்ததால் பொது மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அங்கு மறு தேர்தல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications