கிணறு விசயத்தில் வார்த்தை தவறிவிட்டரா ஒபிஎஸ்...? லட்சுமிபுரத்தில் பதற்றம்- வீடியோ

ஓபிஎஸ் சொன்னபடி கிணற்றை அன்பளிப்பாக கொடுக்காததால் தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தில் இருதரப்பினருக்குமிடையில் மோதல் வெடித்தது.

Subscribe to Oneindia Tamil

தேனி: முன்னாள் முதல்வர் தனக்கு சொந்தமான கிணற்றை ஊர்பொதுமக்களுக்கு அன்பளிப்பாக கொடுக்கிறேன் என கூறி அதை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டதால் லட்சுமிபுரத்தில் மோதல் உண்டாகி பதற்றம் நிலவுகிறது.

தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்சுக்கு சொந்தமாக நிலமும் ராட்சத கிணறுகளும் உள்ளன. இந்த ராட்சத கிணற்றில் அதிக திறன்கொண்ட மோட்டர்களை வைத்து நீர் இறைப்பதால் பொதுமக்களுக்கு குடிக்க நீர் கிடைக்கவில்லை என கூறி ஊர் கூட்டத்தில் புகார் கூறப்பட்டது. மேலும், மக்கள் காலி குடங்களை வைத்து போரட்டம் நடத்தினர்.

Recommended Video

    Clash Between OPS Supporter And Villagers-Oneindia Tamil

    அதையடுத்து, பலமுறை ஒபிஎஸ் ஆதரவளர்களுக்கும் ஊர்பொதுமக்களுக்கும் இடையே லட்சுமிபுரம் கிராம கூட்டத்தில் மோதல் உருவானது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கிணற்றை பொதுமக்களுக்கு அன்பளிப்பாகக் கொடுப்பதாக ஓபிஎஸ் அறிவித்தார்.

    இந்நிலையில் ஓபிஎஸ் மனைவியின் பெயரில் இருந்த நிலத்தையும் கிணற்றையும் லட்சுமிபுரத்தைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவருக்கு விற்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மீண்டும் லட்சுமிபுரத்தில் கிராமக் கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் ஊர்பொதுமக்களுக்குமிடையே மோதல் உருவானது. சொன்ன சொல்லைக் காப்பாற்றாமல் ஓபிஎஸ் ஏமாற்றிவிட்டதாக அவ்வூர் பொதுமக்கள் மிகுந்த ஆதங்கத்துடன் கூறினர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+