ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டுவதெல்லாம் அந்த காலம்.. சீறும் தோப்பு வெங்கடாசலம்
சென்னை: டிடிவி தினகரனை 420 என்று விமர்சனம் செய்ததை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தவிர்த்திருக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தெரிவித்தார்.
பெருந்துறையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த தோப்பு வெங்கடாசலம் தெரிிவித்ததாவது:
தினகரனுக்கு எதிரான தீர்மானம் எந்த விதியில் நிறைவேற்றப்பட்டது. தைரியம் இருந்தால் எடப்பாடி தரப்பு பொதுக்குழுவை கூட்டி தினகரனை நீக்குவதற்கு தீர்மானம் நிறைவேற்றிப் பார்க்கட்டும்.

தினகரனை 420 என விமர்சித்ததை முதல்வர் தவிர்த்திருக்க வேண்டும். முதல்வர் அப்படி சொன்ன பிறகுதான் டிடிவி தினகரனும் அதே வார்த்தைகளால் முதல்வரை விமர்சனம் செய்தார்.
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்ட வேண்டும் என்பதெல்லாம் அந்தக்காலம்.
எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் கைகாட்டியதும் அவர்களை பார்த்து லட்சக்கணக்கான மக்கள் வாக்களித்த புண்ணிய பூமி இது. இப்போது அதுபோன்ற மக்களை ஈர்க்கும் தலைவர் அதிமுகவில் இருக்கிறார்களா? டிடிவி தினகரன்தான் இளைஞர்களை ஈர்க்கும் தலைவர் என்பதால் அவரை முன்னிறுத்துகிறோம்.
அதிமுகவை தேடி கண்டுபிடிக்கும் நிலை இருக்கிறது. அதிமுகவை வழிநடத்த கூடிய தகுதி படைத்த ஒரே தலைவர் தினகரன். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நன்றி மறக்க மாட்டார் என நம்புகிறோம். அவரது மனசாட்சிக்கும், அவர் கும்பிடும் முருகனுக்கும் அவரை யார் முதல்வராக ஆக்கினார்கள் என்பது தெரியும்.
அமைச்சர் செங்கோட்டையன் மனதில் நன்றி இருக்கிறது. அதிமுக துணை பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டது செல்லாது என நீதிமன்றம் கூறவில்லை. எனவே அவருக்கு யாரை கட்சியில் சேர்க்க வேண்டும், நீக்க வேண்டும் என்பது குறித்த அதிகாரம் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications