மனைவியை சம்பாதிக்க கட்டாயப்படுத்துவது இந்து மத தத்துவத்திற்கு எதிரானது: சென்னை ஹைகோர்ட்
சென்னை: கணவன் ஆதரவு இன்றி, மனைவி சம்பாத்தியத்தில் குடும்பத்தை நடத்த வேண்டும் என்பது இந்து மத தத்துவங்களுக்கு எதிரானது என்று சென்னை ஹைகோர்ட் தெரிவித்துள்ளது.
மதுரையை சேர்ந்த போஸ்ட் மேன், ஒருவர், தனது மனைவியை விவாகரத்து செய்திருந்த நிலையில், குடும்ப நல நீதிமன்றம், அவரது மனைவிக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

மனைவிக்கும், அவருடன் வாழும் 2 வயது பெண் குழந்தைக்குமாக இந்த தொகை நிர்ணயிக்கப்பட்டது. இதை எதிர்த்து, சென்னை ஹைகோர்ட்டில் போஸ்ட்மேன் கிரிமினல் ரிவிசன் மனு தாக்கல் செய்தார். நீதிபதி பி.தேவதாஸ் இதை விசாரித்தார்.
நீதிபதி தனது தீர்ப்பில் கூறியதாவது: மனுதாரர் தனது மனைவி ஒரு கடையில் வேலை செய்து வருவதாகவும், அந்த சம்பாத்தியமே அவரது குடும்பத்தை கவனித்துக் கொள்ள போதும் என்றும், எனவே, மாதம் ரூ.5 ஆயிரம் பணத்தை தான் தர தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மனுதாரர் மனைவி பணியாற்றுகிறார் என்பதற்கான உறுதியான ஆதாரத்தை கோர்ட்டில் சமர்ப்பிக்கவில்லை. அப்படியே சமர்ப்பித்தாலும்கூட, மனைவி வேலை பார்க்கிறார் என்பதற்காக கணவன், அவருக்கு தேவைப்படும் பணத்தை தரக்கூடாது என்று கூற முடியாது.
இந்து திருமண சட்டத்தின்படி, மனைவியை பராமரிக்க வேண்டிய முழு பொறுப்பும் கணவனை மட்டுமே சேரும். இந்து குடும்பத்தை சேர்ந்த ஒரு கணவன், தனது மனைவி கட்டாயம் வேலைக்கு செல்ல வேண்டும் என்றோ, அவரை அவரே பார்த்துக்கொள்ள சம்பாதித்துக்கொள்ள வேண்டும் என்றோ வற்புறுத்த முடியாது. அவ்வாறு கூறுவது இந்து தத்துவங்களுக்கு எதிரானது.
நீங்கள் மத்திய அரசு ஊழியர். மாதம் ரூ.23 ஆயிரம் சம்பாதிக்கிறீர்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடந்தோறும் சம்பள உயர்வு மட்டுமின்றி, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, டி.ஏ படியும் மாற்றியமைத்து தரப்படுகிறது. எனவே மனைவியை பராமரிக்க பண வசதியில்லை என கூற முடியாது.
மதுரையில் ரூ.5 ஆயிரத்தை வைத்துக்கொண்டு ஒரு பெண்மணி, தனது குழந்தையையும் பராமரிப்பது என்பது மிகவும் கடினம். வயிற்றுக்கும், வாய்க்கும்தான் அந்த பணம் போதும். இவ்வாறு நீதிபதி கூறி, போஸ்ட்மேன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications